Friday, October 30, 2009

யார் மிகவும் அழகு, ஆணா? பெண்ணா?

இயற்கையில் யார் மிகவும் அழகு,ஆணா? பெண்ணா?. ஒவ்வொரு பாலினரும் இக்கேள்விக்கு விடையாக எதிர்பாலினரே அழகு என்பார்கள். அந்த ஈர்ப்புதான் உலகை இன்றும் இயக்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஈர்ப்பு இல்லையென்றால் உலகின் இயக்கம் என்றோ நின்று போயிருக்கும். சரி ஈர்ப்பை விட்டு விட்டு வெளியே வந்து பார்ப்போம். உலகில் உண்மையில் யார் அழகு்? ஆண்களா? பெண்களா?. இக்கேள்வி மனிதருக்கானது மட்டும் அல்ல, இக்கேள்வி அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்.

விலங்கியலில் Sexual Dimorphism என்றொரு சொற்றொடர் உண்டு. ஒரு இனத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இனப்பெருக்க உறுப்புகள் தவிர்த்த மற்ற வேறுபாடுகளைக் குறிக்கும் இச்சொற்றோடர். எ.கா: சிங்கம்,மயில்.
விலங்குகளில் Sexual Dimorphism அதிகமாக உள்ளதும் மக்களுக்கு மிக அதிகமாக பரிச்சயமானதுமாக உள்ள விலங்கு, சிங்கம்.


Link
Photo Courtesy : wikipedia(Yaaaay&Falense)

பொதுவாக எல்லா இனங்களிலும் ஆணானது பெண்ணைக் கவர பல வழிகளிலும் முயற்சிக்கும். அதற்க்கு Sexual Dimorphism உதவியாக இருக்கும். அதிக Sexual Dimorphism உள்ள உயிரினமானது அதிகமாக விரும்பப்படும்.
எடுத்துக்காட்டாக அழகாக தோகையைக் கொண்டதும், அழகாக தோகையை விரித்து ஆடும் ஆண் மயிலானது அதிகமாக பெண் மயில்களால் விரும்பப்படும். இங்கு பெண்ணே தன் துணையைத் தேர்ந்தெடுக்கும்.

Photo courtesy: Wikipedia(Superborsuk)

Sexual Dimorphism அதிகமாக உள்ள விலங்குகளில் ஒன்றான யானையில் அதன் பெரிய தந்தங்களும், பெரிய கட்டுமஸ்தான உடம்பு மட்டுமே பெண் யானையுடன் கூடுவதற்கு பயன்படுவதில்லை. ஒரு ஆண் யானையானது தன்னுடைய எதிரி ஆண் யானையுடன் மோதி அதனை வீழ்த்திய பிறகே பெண்ணுடன் கூட முடியும். இங்கு பெண்ணின் விருப்பம் கேட்கப்படுவதில்லை.

Photo Coutesy:Wikipedia.org(Mr Raja Purohit)

மேலே உள்ளது சல்மான்கான் புகழ் Blackbuck. கருப்பாக கொம்புடன் இருப்பது ஆண் மான், மாநிறத்தில் இருக்கும் மற்ற இரண்டும் பெண் மான்கள்.

Sexual Dimorphism இருக்கும் உயிரினங்களில் ஆணானது, பெண்ணிலிருந்து மாறுபட்டு கவர்ச்சியாக,உறுதியாக,அழகாக இருக்கும்.




Photo Courtesy : wikipedia.org(Aviceda&PurpleHz)

மேலே உள்ளது Australian Figbird. முதலில் உள்ளது ஆண் பறவை. அடுத்து் உள்ளது பெண் பறவை .

ஏன்
மனித இனத்திலே Sexual Dimorphism உண்டு.

Photo Courtesy: http://www.zastavki.com/

இதற்க்கு மாறாக சில இனங்களில் பெண் மாறுபட்டு சற்றுப் பெரிதாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். எ.கா: தேனீ,சிலந்தி.

இவ்வினங்களில் ்பொதுவாக பெண்ணானது ஆணை விட பெரிதாக இருக்கும். இதற்க்கு Reverse Sexual Dimorphism என்று பெயர் (பெரும்பாலான சிலந்தி இனங்களில் புணர்தலுக்குப் பின் ஆண் சிலந்தியை, பெண் சிலந்தியானது சாப்பிட்டு விடும்!).


Photo Courtesy : Wikipedia.org(Sanba38)

படத்தில் பெரிதாக உள்ளது பெண் சிலந்தி, பக்கத்தில் சிறிதாக உள்ளது ஆண் சிலந்தி .

Sexual Dimorphism இல்லாத இல்லாத உயிரினங்களும் உலகில் அதிகம் உண்டு. பெரும்பாலான பாம்பு இனங்களில் Sexual Dimorphism பெரிதாக கிடையாது. விலங்குகளில் இதற்க்கு உதாரணம் சொல்வதென்றால், Cheetah.

பொதுவாக உலகில் Sexual Dimorphism ஆனது Reverse Sexual Dimorphism த்தை விட அதிகம். அதாவது ஆணே அழகானவன். ஆனால் ஆணின் இந்தக் கவர்ச்சியும்,அழகும்,உறுதியும் பெண்ணைக் கவர்வதர்க்கே!.

Wednesday, October 28, 2009

சோமாலியப் பெண்களை துரத்தும் பசிகொடுமை,கற்பழிப்புகள் மற்றும் கழுதைப்புலிகள்

சோமாலியா - ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் காண்டாமிருகத்தின் கொம்பு போல் இருக்கும் ஒரு நாடு. தென்னிந்தியாவின் பரப்பளவுள்ள இந்நாடு 1960 ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்தும், இத்தாலியிடமிருந்தும் சுதந்திரம் பெற்றது. 1991 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு என்ற ஒன்று இல்லாமலே இருந்து வருகிறது. 2008 ஆம் ஆண்டின் பின் பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் நாட்டின் தலைநகரம் உட்பட தென் பகுதி முழுவதையும் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்த தீவிரவாதிகளின் ஆதரவுடனையே தற்பொழுது இந்தியப் பெருங்கடலில் கடற்கொள்ளைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சோமாலியாவிற்க்கென்று ஒரு ராணுவம் கிடையாது.

நெடுங்காலமாகவே இந்நாடு பசிக் கொடுமையால் அவதிப்பட்டுக் கொண்டுவருகிறது. இதற்க்கு மிக முக்கியக் காரணம் அங்கு நடைபெற்றுக் கொண்டுவரும் இனக்கலவரங்களே. ஒரு மத்திய அரசும், ராணுவமும் இல்லாத காரணத்தாலும் பசிக் கொடுமையாலும் அங்கு குற்றங்கள் மிக அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டுவருகின்றன.

அங்குள்ள பெண்கள் பசிக் கொடுமையால் தங்கள் கணவர்களால் கைவிடப்படுகிறார்கள். சில ஆண்கள் வேலை தேடி பக்கத்து நாடான ஏமனுக்கு கள்ளத்தனமாக செல்கிறார்கள். அப்படிச் சென்றவர்களின் கதி என்னவென்று கூட அவர்களின் மனைவிகளுக்குத் தெரிவதில்லை. இத்தகையப் பெண்களை பசி கொடுமை துரத்துவதோடு அல்லாமல் கற்பழிப்புகளும் தொடர்கின்றன. சில பெண்கள் கால்நடைகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வருகிறார்கள். அந்தக் கால்நடைகள் கூட கழுதைப்புலிகளால் தூக்கிக் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறாக அங்குள்ள பெண்களின் வாழ்க்கை பசி கொடுமையாலும், கற்பழிப்புகளாலும், கழுதைப்புலிகளாலும் கிழிக்கப்படுகின்றது .

மேலும் அறிய இங்கே சொடுக்கவும் .

Monday, October 26, 2009

கற்பனைகள் கட்டுக்கடங்காதவைகள்!

ஒரு விஷயத்தை எழுத்திலிருந்து திரைக்கு கொண்டுவருவது என்பது சற்றுக் கடினமான செயலே. பொதுவாக ஒரு திரைப்பட இயக்குனர் தான் நினைத்ததை அப்படியே திரையில் கொண்டு வந்திருப்பார்களா என்றால், 100% பண்ணி இருக்கமாட்டார்கள். ஒவ்வொரு படத் தோல்வியின் போதும் ஒவ்வொரு நடிகரும் கூறும் குற்றச்சாட்டு, இயக்குனர் என்னிடம் கூறிய கதை வேறு ஆனால் படத்தில் வந்தது வேறு என்பார்கள். நிச்சயம் இயக்குனர் வேறு கதையை படமெடுத்திருக்கமாட்டார், ஆனால், தான் கூறிய கதையையே படமாக்கும் போது அது வேறு பரிமாணம் எடுத்திருக்கும். இது அவரே எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கலாம். திரைப்படம் எடுக்கும்போது கதை தெரிந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கதையைக் கற்பனை செய்திருப்பார்கள். ஒரு தயாரிப்பாளர் ஒரு விதமாக கற்பனை செய்திருப்பார், கதாநாயகன் ஒரு விதமாக கற்பனை செய்திருப்பார். ஏன் இயக்குனரே ஒரு விதமாக கற்பனை செய்திருப்பார். ஒரு படத்தின் வெற்றியே குறைந்தபட்சம் ஒரு இயக்குனர் ஒரு கதையில் தான் கற்பனை செய்ததில் எத்தனை சதவீதம் திரையில் கொண்டு வர முடிந்தது என்பதில்தான் இருக்கிறது. ஏனெனில் ஒரு மனிதனின் கற்பான சக்திக்கு ஈடு எதுவும் கிடையாது. அது எல்லைகள் அற்றது. அதனை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட திரைக்கு கொண்டு வருவதென்பது அசாத்தியமான செயல். அதனை ஒரு இயக்குனர் எந்த அளவுக்கு வெற்றிகரமாகச் செய்கிறார் என்பதில் தான் ஒரு படத்தின் வெற்றியே அடங்கியுள்ளது.

பொதுவாக நாவல்களை படமாக்குவதென்பது சற்று அசாத்தியமான செயலே. ஏனெனில் இங்கு கதையானது ஏற்கனவே ரசிகனுக்கு அறிமுகமானதாக இருக்கும். அந்நாவலை படிக்கும்போது ஒவ்வொரு ரசிகனும் ஒவ்வொரு விதமாக கற்பனை செய்திருப்பான். அதனை ஈடு செய்வதென்பது பெரிய விஷயம். அதனை மிகச் சில இயக்குனர்களே வெற்றிகரமாகச் செய்துள்ளனர். எ.கா : பாலச்சந்தர். அவருடைய 47 நாட்கள், எழுத்தாளர் சிவசங்கரியின் நாவலே. அப்படம் ஒரு வெற்றிப் படமாகவே அமைந்தது. ஆனால், நான் அந்நாவலை படித்தபின் அப்படத்தைப் பார்த்தவர்களைக் கண்டதில்லை. அதனால் அப்படம் ஒரு வாசகனுக்கு எந்த அளவு பிடித்தமாக இருந்தது என்பது எனக்குத் தெரியாது!.

தமிழ்த் திரையில் ஆரம்ப காலத்தில் வந்த படங்கள் எல்லாமே மக்களுக்கு அறிமுகமான கதைகளாகவே இருந்தன. ஆரம்ப காலத்தில் தமிழ்த் திரை உலகம் புராணக் கதைகளையே எடுத்தது. அவை பெரும்பாலும் வெற்றிப் படமாகவே இருந்தன. அவை வெற்றிப் படமாக அமைந்ததற்கு இயக்குனர்கள் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்கள் என்பது மட்டுமே காரணம் அல்ல. அக்காலங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் மிகக் குறைவு, அதனால் மக்கள் எதைத் திரையிட்டாலும் பார்த்தார்கள். ஆனால் இக்காலம் அப்படி அல்ல. மேலும் இக்கால (வாசகர்களின்) ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகம். அதனைப் பூர்த்தி செய்வது என்பது சற்றுக் கடினமானதே.

நான் படித்ததிலேத் திரைக்கு வந்த ஒரு தொடர், லக்கி லூக் கார்ட்டூன். சிறு வயதில் நான் லக்கி லூக்கின் ரசிகன். அக்கார்டூனைப் படிப்பது என்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. சிறிது காலத்திற்கு முன்பு வரை கூட அக்கார்டூனைத் தேடி அதனைத் தமிழில் வெளியிட்ட ராணி காமிக்ஸ்ற்கு கடிதம் எல்லாம் அனுப்பினேன். அதே லக்கி லூக்கை சுட்டி தொலைக்காட்சியில் பார்த்த போது மிக ஆவலுடன் பார்த்தேன். ஆனால், அது என்னை ஏனோ அவ்வளவாக கவரவில்லை. சில விசயங்களைப் பார்க்கும் போது, இதனைப் பார்க்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றும். அதேபோல் தான் லக்கி லூக்கை சுட்டி தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்குத் தோன்றியது. அதற்குக் காரணம் அது என் கற்பனையை ஈடு செய்யாமல் இருந்தது என்பதோடு மட்டுமல்லாமல் என் கற்பனையில் இருந்த லக்கி லூக்கை சிதைப்பதாகவும் இருந்தது.

கற்பனைகள் கட்டுக்கடங்காதவைகள். அதனை ஈடு செய்வது அவ்வளவு எளிதல்ல!

பின் குறிப்பு:

1. இப்பதிவையே நான் எப்படியோ எழுத எண்ணி எப்படியோ முடித்திருக்கிறேன். அப்படியானால் எண்ணத்திலிருப்பதை எழுத்திற்கும், எழுத்திலிருப்பதை ஒளிக்கும் கொண்டு வருவது எவ்வளவு கடினமான விஷயம்!.

2. 47 நாட்கள் திரைப் படத்தைப் பற்றிக் கூறியதற்காக மதுவிற்கும் கார்த்திக்கிற்கும் நன்றி :)

Sunday, October 25, 2009

Good insight into Taliban

David Rohde - 7 மாதம் 10 நாட்களுக்குப் பிறகு தலிபானிடமிருந்து தப்பி வந்த NewYorkTimes பத்திரிக்கையாளர்.

அவருடைய பதிவைக் காண இங்கே சொடுக்கவும். பின்வரும் பதிவு அவருடைய பதிவின் சுருக்கமே. அவருடைய பதிவைப் படிப்பதாக இருந்தால் இப்பதிவை அவருடையப் பதிவைப் படித்த பின் படிப்பது நலம். ஏனெனில் அவருடைய பதிவு பல திருப்பங்களை கொண்டது. பின் வருவனவற்றைப் படித்த பின் அவருடைய பதிவைப் படித்தால் சுவாரசியம் இருக்காது !

சரி அவருடையப் பதிவின் சுருக்கத்தைக் காண்போம்.

கடந்த 2008 Nov 10 ஆம் தேதி அவர் ஒரு தலிபான் தலைவரை(Abu Tayeb) பேட்டி காணச் செல்லும் வழியில் கடத்தப்பட்டார் . அவருடன் அந்தப் பேட்டிக்கு ஏற்பாடு செய்த ஒரு ஆப்கானிஸ்தான் செய்தியாளர் Tahir Luddin ம், அவர்களுடைய ஊர்தி ஓட்டுனர் Asad Mangal ம் கடத்தப்பட்டனர். அவர்களைக் கடத்தியவன் தன்னை Mullah Atiqullah என்று அறிமுகப்படுத்திக்கொண்டான்். பின்னர் அவர்கள் பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாகிஸ்தானில் அவர்கள் தலிபானின் strong hold ஆன Waziristan பகுதியில் அடைத்துவைக்கப்பட்டனர். பிணையத்தொகையாக பல மில்லியன் டாலர்களும் , தலிபான் கைதிகளும் கேட்கப்பட்டனர். சிறிது நாட்களுக்குப் பிறகே David Rohde க்குத் தெரியவந்தது , Mullah Atiqullah வேறு யாருமல்ல , Abu Tayeb தான். அதாவது David, தான் யாரைப் பேட்டி காணச் சென்றாரோ, அவனாலே கடத்தப்பட்டார். David, வாஜிரிச்டனில் ஒன்பது இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டார்.

இந்தப் பல மாதங்களில் அபு தயெப், டேவிட்டிடம் பேச்சுவார்த்தை முடிவில் இருப்பதாகவும், நீ விரைவில் ஊர் திரும்புவாய் என்றும் கூறி வந்திருக்கிறான். ஆனால் டேவிட் அவற்றை நம்புவதாக இல்லை. ஏனெனில் அபு தயெப், பேச்சுவார்த்தையில் அரசாங்கம் 7m $ க்கும் மேலும் guantanamo bay இலிருந்து கைதிகளை விடுவிக்க ஒத்துக்கொண்டிருப்பதாகவும் கூறி வந்திருக்கிறார். அமெரிக்காவைப் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் இதை நம்ம மாட்டார்கள். ஏனெனில் அமெரிக்கா என்றுமே தீவிரவாதிகளுக்குப் பணிந்ததே இல்லை. அமெரிக்கா என்றுமே பிணைக்கைதிகளுக்காக கைதிகளை விடுவித்ததே இல்லை. அதனால் டேவிட் இதனை நம்பாதது ஆச்சரியமில்லை.மேலும் அவர் தான் அந்த அளவிற்கு தகுதி உள்ளவன் என்றும் நம்பவில்லை!.இதற்கிடையில் டேவிட் தங்கியிருந்த வீடு ஒரு தடவை அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. அதிலிருந்தும் அவர் தப்பித்துள்ளார்.

இப்படியே ஏழு மாதங்கள் சென்றுள்ளது. ஒருநாள் டேவிடும் தகீரும் தப்பிக்க முடிவெடுத்து ஒரு பாகிஸ்தான் ராணுவ சோதனைச்சாவடியை அடைந்தனர். ஆசாதை, டேவிட்டும் தகீரும் நம்பவில்லை. அதனால் அவரை தனியாக விட்டு விட்டு வந்துவிட்டார்கள். டேவிட்கு பாகிஸ்தான் ராணுவ சோதனைச்சாவடிக்குச் செல்வதில் தயக்கம் இருந்தது. ஏனெனில் அவர் பாகிஸ்தான் ராணுவத்தை நம்பவில்லை. அவர்கள் தம்மை திருப்பி தலிபானிடம் ஒப்பைடைத்துவிடக் கூடும் என்று பயந்தார். இருந்தபோதிலும் வேறு வழியே இல்லாமல் பாகிஸ்தான் ராணுவ சோதனைச்சாவடியை அடைந்தார். நல்லவேளையாக அவர் பயந்தபடி எதுவும் நடக்கவில்லை. ஆசாத்தும் பத்து நாட்களுக்குப் பிறகு தப்பி வந்து விட்டார்.

அவருடையப் பதிவு தலிபானின் அன்றாட நடவடிக்கைகளை அறிய உதவியாக உள்ளது.

Saturday, October 24, 2009

ஜென் கதைகள்

ஜென் கதைகள் - எனக்குப் பிடித்தமான ஒன்று. அது உணர்த்தும் தத்துவங்கள் அருமையாக இருக்கும். கல்லூரி நாட்களில், கவிஞர் புவியரசு எழுதிய "மீண்டும் ஜென் கதைகள் " என்ற புத்தகம் வாங்கி இருந்தோம். வாங்கிய அன்றே பல பக்கங்கள் படித்து முடித்திருந்தேன். பிறகுதான் தோன்றியது, ஜென் கதைகளை நாவல்களைப் போன்று ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடாதென்று. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையாகப் படித்து உணரவேண்டும் என்று தோன்றியது. அதனால் அப்புத்தகத்தை அத்துடன் விட்டு விட்டேன். பிறகு அப்புத்தகம் இருப்பதே மறந்துவிட்டது. பல ஆண்டுகள் கழித்து சென்ற வாரம் அப்புத்தகத்தைக் கண்டெடுத்தேன். மீண்டும் முதலிலுருந்து படிக்க ஆரம்பித்தேன். ஜென் கதைகள் மீதான ஈர்ப்பு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

சரி புத்தகத்திற்குள் செல்வோம்.

புவியரசு அப்புத்தகத்தை ஆரம்பித்திருப்பதே அருமையாக இருக்கும்.

கடலில் வாழும் ஒருசிறிய மீனுக்கு ஒரு சந்தேகம் வரும். கடல்னா என்ன? அது எப்படி இருக்கும்? என்று. அதனால் அது ஒரு பெரிய மீனிடம் சென்று கேட்க்கும், கடல் என்றால் என்ன? அது எங்கே இருக்கும்? என்று. அதற்க்கு அந்தப் பெரிய மீன் அதுதான் உன்னைச் சூழ்ந்த்திருக்கிர்றது, அதற்குள் தான் நீ இருக்கிறாய், என்று சொல்லும் . அதற்க்கு அந்தச் சிறிய மீன், ஆனால் அது எனக்கு தெரியவில்லையே என்று கேட்கும். அதற்க்கு அந்தப் பெரிய மீன், நீ அதற்குள் இருப்பதால்தான் உனக்குத் தெரியவில்லை, நீ பிறந்ததும் இக்கடலில்தான், வாழ்ந்துகொண்டிருப்பதும் இக்கடலில்தான் , உன்னைச் சுற்றி இருப்பதும் கடல், உன்னுள் இருப்பதும் கடல் என்று சொல்லும்.

அதேபோல்தான் ஜென்னும், அது நம்மைச் சுற்றி இருப்பதாலே அது நமக்குத் தெரிவதில்லை. நாம் இயல்பாகவே ஜென்னில்தான் இருக்கிறோம். அதாவது நம் இயற்கைதான் ஜென் என்று அருமையாக ஆரம்பித்திருப்பார் .

இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த பிற இரண்டு விஷயங்கள், ஒவ்வொரு கதைக்கும், அக்கதைக்கு ஈடான, தமிழ் மொழியில் உள்ள தத்துவங்களை கொடுத்திருப்பார். மேலே கூறிய கதைக்கு அருமையான அருளையர் தத்துவம்.

" உள்ளும் புறம்பும் உலாவிய ஒரு பொருள் ".

மற்றொரு முக்கிய அம்சம் ஒவ்வொரு கதைக்கும் அம்சமான ஓவியங்கள். மிக அருமையாக இருக்கும் அந்த ஜப்பானிய ஓவியங்கள்.

இப்புத்தகத்தில் புவியரசு , ஜென் மிகவும் எளிமையானது. மிகவும் எளியதாக இயல்பானதாக இருப்பதாலே அது நமக்கு அரியதாக புதிரானதாகத் தோன்றுகிறது என்பார்.

ஒரு கதையில் ஒரு குருவும் சீடனும் பயணம் மேற்க்கொண்டிருப்பார்கள். அப்பொழுது அவர்கள் வழியில் ஒரு ஆறு குறுக்கிடும். ஆற்றின் கரையில் ஒரு அழகான இளம்பெண் கவலையோடு நின்று கொண்டிருப்பாள். குரு அவளை நெருங்கி ஏனம்மா கவலையோடு நின்று கொண்டுருக்கிறாய் என்பார்? அதற்க்கு அப்பெண், நான் இந்த ஆற்றைக் கடக்க வேண்டும். ஆனால் பயமாக இருக்கிறது என்பாள். உடனே குரு நான் உனக்கு உதவுகிறேன் என்று அவளைத் தூக்கிக் கொண்டு ஆற்றில் இறங்கி நடக்க ஆரம்பிப்பார். சீடனுக்கு ஒரே திகைப்பாகிவிடும். என்னடா நாம் துறவிகள் ஆயிற்றே, நாம் பெண்களை தொடக்கூடாதே, ஆனால் நம் குரு ஒரு பெண்ணைத் தொட்டு தூக்கி கொண்டு செல்கிறாரே? என்று. இருந்தாலும் பேசாமல் குருவுடன் ஆற்றைக் கடப்பான். ஆற்றின் மறு கரையில் குரு அப்பெண்ணை இறக்கி விட்டு நடந்து செல்வார். சீடனும் பேசாமல் ஆனால் இதைப் பற்றி எண்ணிக் கொண்டே பின் தொடர்வான். இருந்தாலும் பொறுக்கமாட்டாமல் அன்று சாயங்காலம் குருவிடம் கேட்டுவிடுவான், குருவே துறவிகளாகிய நாம் பெண்களைத் தொடக்கூடாதே. ஆனால் நீங்கள் இன்று ஒரு பெண்ணைத் தூக்கி கொண்டு சென்றீர்களே? அது எப்படி? என்று கேட்பான்.

அதற்க்கு அந்த குரு "நான் அவளை அப்பொழுதே இறக்கிவிட்டுவிட்டேனே!. நீ இன்னுமா சுமந்து திரிகிறாய் " என்பார்.

இக்கதைக்கு ஒரு அருமையான பாரதி பாடல்

"புறத்தே சுமக்கிறேன்; அகத்தி னுள்ளே இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ " .

மற்றொரு கதையில் ஒரு பெரிய போர் வீரர் இருப்பார். போர்களில் அவருடைய சாகசத்தைப் பாராட்டி ஒரு அழகிய கோப்பையை பரிசளித்திருப்பார்கள். அக்கோப்பையை கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பார். அப்பொழுது அது கை தவறி கீழே விழப் பார்க்கும். கண நேரத்தில் திகைத்து அதனைப் பிடித்து மேசை மீது வைப்பார். பார்த்தால் அதற்குள் அவருக்கு குப்பென்று வேர்த்திருக்கும். அதைப் பார்க்கையில் அவருக்கே வியப்பாக இருக்கும். என்னடா எவ்வளவு பெரிய போர்களில் எல்லாம் பயம் என்பதே அறியாமல் பல சாகசங்களைப் புரிந்திருக்கிறோம் , ஆனால் இக்கோப்பை சட்டென்று நம்மை பயம் கொள்ள வைத்துவிட்டதே என்று வியப்பார். சிறிது யோசித்த பிறகே புரியும் அந்தக் கோப்பையின் மீது வைத்தே பற்றே தன்னைப் பயம் கொள்ளச் செய்தது என்று. உடனே அக்கோப்பையை தூக்கிப் போட்டு உடைத்து அமைதி கொள்வார்.

இதற்க்கு ஒரு குறள்,

அஞ்சுவ தோறும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோறும் அவா.

மற்றொரு கதையில் ஒரு செல்வந்தர், ஒரு ஜென் ஞானியைச் சந்தித்து நல் மொழி கேட்பார். அதற்க்கு அஞ்ஞானி

"தந்தை இறப்பார்
மகன் இறப்பான்
அப்புறம்
பேரன் இறப்பான் " என்பார்.

செல்வந்தர் திடுக்கிட்டு, என்ன ஞானி அவர்களே இவ்வளவு அமங்கலமாக கூறுகிறீர்கள் என்பார்.

ஞானி சிரித்துக் கொண்டு, தந்தை, மகன், பேரன் என்ற வரிசைக்கிரகமாக முதுமை அடைந்த பின் மரணம் நிகழ்வது புனிதமான மகிழ்ச்சியானது அல்லவா? என்பார்.

எவ்வளவு அருமையான மொழிகள்.

Sunday, October 18, 2009

புலி



புலி, இந்தியாவின் தேசிய விலங்கு. புலியின் கம்பீரமே மிக அருமையாக இருக்கும். சொல்லப் போனால் புலிதான் உண்மையான காட்டு ராஜா. ஒரு புலிக்கும் சிங்கத்துக்கும் சண்டை வைத்தால் பெரும்பாலும் புலிதான் ஜெயிக்கும் . சிங்கத்தின் கர்ஜனைக்காகவே சிங்கம் காட்டு ராஜாவாக உள்ளது!.

உலகிலேயே புலிகள் அதிகமாக இருக்கும் நாடு இந்தியா தான். இதற்க்கு நாம் இந்திரா காந்திக்கே நன்றி சொல்ல வேண்டும். 1972 ஆம் ஆண்டு அவர் கொண்டு வந்த "Project Tiger" திட்டமே புலிகளை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றியது . தற்போது இந்தியாவில் 1411 புலிகள் உள்ளன. இது இதற்க்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் எண்ணிக்கையைவிட மிகக் குறைவு தான். சென்ற கணக்கெடுப்பின்போது 3000 திற்கும் மேற்ப்பட்ட புலிகள் இருந்தன. இதற்க்கு முக்கியக் காரணம் தற்போதைய கணக்கெடுப்பு சென்ற கணக்கெடுப்பைவிட மேம்பட்ட அறிவியல் முறைப்படி எடுக்கப்பட்டது. அதனால் உண்மையான எண்ணிக்கை தெரிய வந்துள்ளது. மேலும் சென்ற கணக்கெடுப்புகளின் போது அதிகாரிகள் தங்கள் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள புலிகளின் உண்மையான எண்ணிக்கையைவிட அதிகமாகக் காட்டினார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இப்புலிகளில் பெரும்பாலானவை இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைதொடரிலும், இந்தியாவின் மத்திய மாநிலங்களில் உள்ள காடுகளிலும், சுந்தரவனக் காட்டிலும் மற்றும் வட கிழக்கு
மாநிலங்களிலும் காணப்படுகின்றன.

இந்தியாவிற்கு அடுத்து புலிகள் அதிகமாக காடுகளில் இருப்பது நேபாளிலும், பங்களாதேசிலும்தான். அதுவும் சில நூறு புலிகளே.

உலகிலேயே புலிகள் அதிகமாக இருக்கும் நாடு இந்தியா என்பது, காடுகளில் இருக்கும் புலிகளின் எண்ணிகையை குறிப்பிடும்போது மட்டும் தான். உண்மையில் புலிகள் அதிகமாக இருக்கும் நாடு அமெரிக்கா. அங்கிருக்கும் புலிகள் அனைத்தும் தனியார் வசமும் மற்றும் Zoo க்களிலும் உள்ளன. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 12000 மேற்ப்பட்ட புலிகள் உள்ளன. ஆனால் காடுகளில் ஒரு புலி கூட கிடையாது. அதனால் தான் இந்தியாவிற்கு இத்தகையப் பெருமை.

அமெரிக்காவிற்கு அடுத்து புலிகள் அதிகமாக இருக்கும் நாடு சீனா. சீனாவில் புலிகள் Tiger Farm களில் வைத்து வளர்க்கப்படுகின்றன. சீனாவில் புலிகளின் உறுப்புகள் குறிப்பாக எலும்புகள் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. அதற்குத் தான் இத்தகைய "Tiger Farms". ஆனாலும் சீனா 1993 ஆம் ஆண்டிலிருந்து புலிகளின் உறுப்புகளைப் பயன்படுத்துவதை தடை விதித்துவிட்டது . இருந்தாலும் இத்தகைய "Tiger Farms" இல் புலிகள் வளர்க்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன . இந்த "Tiger Farm" களில் இறக்கும் புலிகளின் உறுப்புகள் சேகரிப்படுகின்றன. சீனாவில் தற்போது இருக்கும் புலிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5000. அவற்றில் பெரும்பாலனவை இத்தகைய "Tiger Farm" களில் தான் உள்ளன. சில புலிகள் சீனக் காடுகளிலும் உள்ளன. இவ்வாறாக "Tiger Farm" களில் சேகரிக்கப்படும் புலி உறுப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், அவற்றையாவது பயன்படுத்தத் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை சீனாவில் வலுப்பெறுகிறது. இருந்தாலும் அத்தடையை நீக்கக் கூடாது என்று எதிர்ப்புக்குரல் உலகம் முழுவதிலிருந்தும் வலுக்கிறது . இந்தியாவும் தடையை நீக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளது. ஏனெனில் அத்தடையை நீக்கினால் இந்தியாவில் புலிகளை வேட்டையாடுதல் அதிகரித்துவிடும்.

இந்தியாவிலும் புலிகள் ஒன்றும் அவ்வளவு பாதுகாப்பாக இல்லை. பன்னா மற்றும் சரிஸ்கா உயிரியல் பூங்காக்களில தற்போது ஒரு புலியைக்கூடக் காண முடிவதில்லை. பெரும்பாலும் வேட்டையாடுதலே அதற்குக் காரணம். அதற்க்கு அதிகாரிகளை மட்டுமே குறை சொல்லிப் பயன் இல்லை. ஏனென்றால் அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஆயுதங்கள் வேட்டைகாரர்களுடன் சண்டையிடுவதற்கு தகுந்த வகையில் இல்லை. மேலும் வனத் துறையில் உள்ள படையின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு. இவ்வாறாக பல மாநிலங்களில் புலிகளின் எண்ணிக்கை குறைந்த போதும் தமிழ்நாட்டில் மட்டும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது நமக்குப் பெருமை தான் !

பல வன உயிரினக்காப்பகங்களிளுருந்து புலிகள் முற்றிலும் காணமல் போனது இந்திய அரசின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. அதனால் "Project Tiger" க்கு மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கி உள்ளது. இருந்த போதிலும் அந்த நிதி ஒழுங்கான முறையில் பயன்படுத்தவேண்டும்.

நம்முடைய சந்ததிகள் புலிகளை படத்தில் மட்டுமே பார்க்கும் நிலைமையை ஏற்ப்படுத்தினால் வருங்காலம் நம்மை மன்னிக்காது.

Saturday, October 17, 2009

தெரிந்ததைச் சொல்கிறேன்

1.பொதுவாக நம் ஊரில் இலவசமாக கிடைப்பதை ஒசியில்் கிடைப்பது என்பார்கள். ஒசி் என்பது தமிழ் வர்ர்த்தை அல்ல . பிரிட்டிஷ் காலத்தில், அரசாங்கத் தபால்களுக்குத் தபால் தலை ஓட்டவேண்டியதில்லை. அவற்றின் மேல் "On Company Service" என்று முத்திரை இடப்பட்டிருக்கும். அவற்றை சுருக்கமாக OC யில் செல்வது என்பார்கள். அதிலிருந்து இலவசமாக கிடைப்பதற்க்கு ஒசி என்று பெயர் வந்து விட்டது.

2.நம் ஊரில் பொதுவாக வழக்கில் இருக்கும் சொல் எம்ப்டன் கப்பல். நீ பெரிய எம்ப்டன் கப்பலா என்பார்கள்?. எம்ப்டன் கப்பல் ஒரு ஜெர்மானியக் கப்பல். முதலாம் உலகப் போரின் போது அக்கப்பல் சென்னைக்கு வந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மீதும், ஜார்ஜ் கோட்டையின் மீதும் குண்டு வீசிவிட்டு பிரிட்டிஷ் கப்பல்களிடம் அகப்படாமல் தப்பித்துச் சென்று விட்டது.இன்றும் கூட அக்கப்பல் குண்டு வீசியதால் ஏற்ப்பட்ட இடிபாடுகளை சென்னைத் உயர்நீதிமன்றத்தில் நீங்கள் காணலாம். அதிலிருந்து அசாதாரணச் செயல்களைச் செய்வபர்களைக் குறிப்பிட எம்ப்டன் கப்பல் என்ற சொல் வழக்கில் வந்தது.

Friday, October 16, 2009

சிரிக்கிறேன், அனைவரும் ஒன்று போல் இருப்பதை எண்ணி!

பொதுவாக எனக்கு தமிழ் உச்சரிப்புகள் சிறப்பாக வரவில்லை. குறிப்பாக ர,ற மற்றும் ல,ள,ழ மற்றும் ந,ன,ண க்குரிய வேறுபாடுகள் ஒன்றும் தெரியவில்லை. தவறாகவே உச்சரிக்கிறேன். தமிழ் இலக்கியங்கள், எடுத்துக்காட்டாக கலிங்கத்துப் பரணி, திருக்குறள், புநானூறு ( இவையே இப்போதைக்கு என்னிடம் உள்ள இலக்கியப் புத்தகங்கள். அகநானூரைப் படிக்க வேண்டும் என்ற ஆசைதான்!, ஆனால் புத்தகம் கிடைக்கவில்லை. பரவாயில்லை இப்போதைக்கு காமத்துப்பால் போதும் ;) ) ஐப் படிக்கும் போது தமிழ் அமுதின் சுவையை முழுவதுமாக உணர முடியவில்லை.ஒரு தமிழனாக இருந்து கொண்டு எனக்கு தமிழே சரியாகத் தெரியவில்லை என்று எண்ணும் போது சற்று அவமானமாகத்தான் உள்ளது.

தமிழின் சிறப்பே ர,ற மற்றும் ல,ள,ழ மற்றும் ந,ன,ண க்குரிய வேறுபாடுகள்தான். அதனால் ஒரு நல்ல தமிழாசிரியரிடம் தமிழ் கற்றுக்கொள்ளலாம் என்று, என் நண்பர்களிடம் விசாரித்தேன், உடனே அவர்கள் அனைவரும் சிரித்தனர், இவ்வளவு நாள் கழித்து நீ தமிழ் கற்றுக்கொள்ளப் போய்கிறாயா என்று. பெரும்பாலானோர் இந்த எழுத்துக்களிடையே உள்ள வேறுபாடு தெரியாமல் தான் இருக்கிறார்கள், பின் நீ மட்டும் ஏன் வேறுபடுகிறாய் என்று சிரித்தார்கள். நானும் அவர்களைப் பார்த்து சிரித்தேன், அவர்கள் அனைவரும் ஒன்று போல் இருப்பதை எண்ணி!

Thursday, October 15, 2009

Wildebeest

Wildebeest, one of the animal you can see most in any episodes about Lion,Cheetah,Hyena,Leopards in Animal Planet channel. Because they are huge in number (around 1.4 million in Serengeti national park and Masai Mara game park itself). Wildebeest, one of my favorite animal but not for very right reason, If you watch Wildebeest in Animal planet, definitely you can see a chase by the Lion or Cheetah or Hyena or even by wild dogs in that episode! ;) .

I like chasing esp by the Cheetahs. Did you watch ever cheetahs chase in slow motion? in many directions? . Wow that would be great. k leave that.

now back to wildebeest.

Wildebeest are antelopes not bovine. Their great migration is one of the world's top ten natural wonder. Great migration occur every year between Serengeti National park and Masai Mara game park in October and return in April and May. That is one of the greatest wonder. In that migration around 2 million mammals participate. Among them 1.4 m are Wildebeest, 3-4 lakhs Thompson Gazelle and around 2 lakh Zebras. In that migration they cross Mara river.



In the migration every year around 2.5 lakhs Wildebeest alone die. Mostly by drowning in the river or by hunting by carnivores. In the land they are attacked by Lion,Hyena,Cheetah,Leopard. In the river attacked by the crocodiles. Crossing Mara river is the most important and most dangerous one because hungry crocodiles are waiting for them. They are migrating for fresh pasture.

Wildebeest ensures that carnivores get food. In Feb-March alone 5 lakh new wildebeest born. So, when you get chance to visit Tanzania or Kenya, don't forget to visit Serengeti or Masai Mara to watch great migration.

India's relationship with S.America

Yesterday India inks nuclear pact with Argentina. This is the seventh country India to do so after United States, France, Russia, Kazakhstan, Namibia and Mongolia. This is the right move and right time to be close with resourceful S.America. We need many more such nuclear deals to cope up with our energy needs. That is very important for our economic growth. To be close with S.America also very important. Because that is very resourceful continent.

Ecuador and Venezuela are in OPEC. But how much India will be close with Venezuela is an important question. Because that (closeness) may anger U.S (Note that once Venezuelan president Hugo Chavez called Bush is a devil in UN!). Brazil is an another resourceful country in that continent. India and Brazil are part of BRIC. Thats why i keep on insisting that BRIC is very important. That has to grow like ASEAN,SCO.

In future Brazil may become a major oil producer and exporter as it had made major oil discoveries. Significant amount of the Brazil energy needs are satisfied by renewable energies and ethanol. Brazil is a leading country in the world using ethanol as an energy. In future we have to adopt for Bio-Energy like ethanol. Then only we can satisfy our surging energy needs.

Let our neighboring big friend to say like "(India) befriend the far and attack the near", but we need more friends culturally,economically and politically including friendly relationship with our neighboring big brother.

Wednesday, October 14, 2009

அளவுக்கு அதிகமான அங்கீகாரங்களும்,புறக்கணிப்புகளும் !

எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் (1*) ஏதேனும் ஒரு விருதைப் பெற்றால் இந்தியர்களும் இந்திய ஊடகங்களும் அவர்களுக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுப்பது. அதில் ஒரு latest entry Mr. வெங்கி ராமகிருஷ்ணன். நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம் அல்லது மறந்து விடுகிறோம். அவர்கள் இந்தியக் குடியுரிமை வேண்டாம் என்று சென்று விட்டவர்கள். அவர்களை போன்ற பெரும்பாலோனோர் தாங்கள் இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்வதைக் கூட விரும்பாதவர்கள் போன்றேத் தோன்றுகிறார்கள்.

“All sorts of people from India have been writing to me, clogging up my email box. It takes me an hour or two to just remove their mails,”
என்கிறார் வெங்கி. இருந்தாலும் நம் மக்கள் விடுவதாக இல்லை, அவரைப் பாராட்டி மெயிலா அனுப்பித் தள்ளுகிறார்கள். இதே போன்று மெயில்களை அவருடன் சேர்ந்து நோபெல் விருது பெற்ற மற்ற இருவருக்கும் அனுப்பினார்களா என்று எனக்குத் தெரியவில்லை !. எனக்குத் தெரிந்த வரையில் அவர் இந்தியாவில் பிறந்தவர். அதைத் தவிர எனக்குத் தெரிந்து அவருக்கும் நமக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை, அவர் கூறியதை போல நாம் அனைவரும் மனிதர்கள் என்பதைத் தவிர!

இதே போன்று கல்பனாச் சாவ்லா இறந்த போது இந்தியா முழுவதும் துக்கம் கொண்டாடியது. அவருடைய இறப்பு மனிதர்கள் என்ற அளவில் அனைவருக்கும் வருத்தம் அளிக்கக் கூடியதே. நாம் நிச்சயம் துக்கம் அனுஷ்டிக்க வேண்டியதுதான், அவரும் ஒரு மனிதர் என்ற அளவில்!. ஆனால் நாம் அதற்க்கும் மேலாகச் சென்று. பல மாநிலங்கள் அவருக்கு இழப்பீடுகளையும், ஏன் தமிழக அரசு அவர் பெயரில் ஒரு விருதே அறிவித்தது!. இறந்து போனவர்களை பற்றிப் பேசக்கூடாதுதான், இருந்தாலும் எனக்கு இவ்விசயங்கள் சற்று அதிகமாகவேப்பட்டது.

இவ்வளவு செய்யும் நாம் ஒன்றை மறந்து விடுகிறோம், இன்னமும் எத்தனையோ நூற்றுக்கணக்கான இந்திய விஞ்ஞானிகள், பல வெளிநாட்டு வாய்ப்புகளை மறுத்துவிட்டு ISRO விலும், DRDO விலும் இன்னும் பல ஆராய்ச்சி நிறுவனங்களிலும், இந்தியாவிற்காக உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இத்தகைய விஞ்ஞானிகள் வெங்கி ராமகிருஷ்ணனோ அல்லது கல்பனா சாவ்லாவோ பெற்ற அங்கீகாரத்தில் நூற்றில் ஒரு பங்காவது பெற்றிருப்பார்களா என்பது சந்தேகமே!

புறக்கணிப்புகள் மட்டுமல்ல, அளவுக்கு அதிகமான அங்கீகாரங்களும் புறக்கணிப்புகள் ஏற்ப்படுத்தும் அதே விளைவுகளை ஏற்ப்படுத்திவிடும்!

P.S:

1.வெளிநாடு வாழ் இந்தியர் என்ற வார்த்தையிலேயே எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. அவர்கள் இந்தியர்களே அல்ல. அவர்களோ அல்லது அவர்களின் முன்னோர்களோ இந்தியாவில் பிறந்தவர்கள், அவ்வளவே!. இந்தியா வேண்டாம் என்று வேற்று நாட்டுக் குடியுரிமைப் பெற்ற பின் எப்படி , அவர்கள் இந்தியர்கள் ஆவார்கள்?

மொழி பெயர்ப்பு

ஒரு மொழிக்கு வளமைச் சேர்ப்பது, அம்மொழியிலேயே சிந்தித்து, அம்மொழியிலேயே எழுதப்படும் நூல்கள் மட்டுமே அல்ல, பிற மொழி நூல்களை ஒரு மொழியானது தன்பால் எப்படி ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பொருத்தும் அமைகிறது. ஒரு சிறந்த மொழியானது பிற மொழி நூல்களை, அந்நூல்களுக்கான கருவிற்கு எந்த வித சேதாரமும் இல்லாமல், அதன் கருத்துக்களை தன்பால், பாலுடன் நீர் கலப்பதைப் போல ஏற்றுக்கொள்ளவேண்டும். இது ஒரு மொழியின் வளமையைப் பொறுத்து மட்டுமே அமைவது அல்ல, அது மொழி பெயர்ப்பாளரையும் சார்ந்தது.

மொழி பெயர்ப்பு என்பது ஒரு விஷயத்தை ஒரு மொழியிலிருந்து பிரதி எடுத்து கொண்டுபோய் பிறிதொரு மொழியில் வைப்பதல்ல. மொழி பெயர்ப்பு என்பது மிகச் சிறந்த கலை. அது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. ஏனெனில் அதற்க்கு அந்நூல் எழுதப்பட்ட மொழியிலும், அந்நூல் மொழிப் பெயர்க்கப்படும் மொழியிலும் ஒருவர் புலமை பெற்றிருக்கவேண்டும். இவ்வாறாகா இரண்டு மொழியிலும் புலமை பெற்றிருப்பதன் காரணமாகவே ஒருவர் மிகச் சிறந்த மொழி பெயர்ப்பாளராக ஆகிவிடமுடியாது. எடுத்துக்காட்டாக ஒரு மொழியில் இருக்கும், இரு மொழி புலமை வாய்ந்த ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர் நிச்சயமாக ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளராக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அக்கலை மிகச்சிலருக்கே வாய்த்திருக்கிறது .

பொதுவாக எனக்கு மொழி பெயர்ப்பு நூல்களைப் படிப்பதில் ஈடுபாடு அதிகம். ஏனெனில் அதன் மூலம் நாம் ஒரு புது கலாச்சாரத்தை, புது கருத்துக்களை, புது அறிவைப் பெற முடியும். ஆனால் துரதிஷ்டவசமாக மிகச் சில (எனக்குத் தெரிந்த அளவில் :) ) மொழி பெயர்ப்பு நூல்களே சிறந்த நூல்களாக அமைகின்றன. மொழி பெயர்ப்பு நூல்களில் அமைந்த்துவிடும் மிக முக்கியமானதும், ஏன் அதன் அடிப்படையையே குழைத்துவிடுவதுமானதுமான மிகப் பெரியத் தவறு வரிக்கு வரி, ஏன் சில நேரங்களில் வார்த்தைக்கு வார்த்தை அமைந்துவிடும் மொழிபெயர்ப்பு. மேலும் மொழி பெயர்க்கும் போது அந்நூலின் பின்புலத்தையும், அந்நூல் நடக்கும் களத்தையும், காலத்தையும் பற்றிச் சிறு குறிப்பாவது சேர்த்துக் கொடுக்கவேண்டியது மிக அவசியம். இது படிக்கும் வாசகனுக்கு அந்நூலைப் புரிந்துகொள்ள உதவும். இதைவிட மிக அவசியம் இந்நூல் எத்தகைய வாசகர்களுக்கானது என்றத் தெளிவு!

நான் படித்த மொழி பெயர்ப்பு நூல்களில் ஒன்று ரஷ்ய மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட "சகாப்தம் படைத்த ஸ்டாலின்கிராட்" (1*) என்னும் நூல். அந்நாட்களில் ரஷ்ய மொழியிலிருந்து பல இந்திய மொழிகளுக்கு பல நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டன. அத்தகைய நூல்களில் ஒன்று இந்நூல். இந்நூல், இந்நூலின் ஆசிரியர் சோவியத் யூனியனின் மார்ஷலாக இருந்த வசீலி சுய்க்கோய் எழுதிய ஒரு வரலாற்றுச் சுயசரிதைக் குறிப்பு எனலாம். இந்நூலில் ஆசிரியர் இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலின்கிராட் நகரை எதிரிகளிடம் (நாஜிக்கள்) இருந்து காப்பாற்றப் போராடியதையும், அதில் வெற்றிப் பெற்றதையும் பற்றிக் குறிப்பிடுகிறார். ஸ்டாலின்கிராட் நகரத் தோல்வியிலிருந்தே ஜெர்மனியின் தோல்வி ஆரம்பம் ஆகிறது. 500 பக்கங்களுக்கு மேல் கொண்ட இந்த நூலை மொழி பெயர்த்தவர் Dr.R.பாஸ்கர். வரலாற்று நூல்களை குறிப்பாக போர் சம்பந்தமான நூல்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்ற போதிலும், இந்நூல் பெரிதாக என்னைப் கவரவில்லை. அதற்குக் காரணம் இந்நூல் படைபிரிவுகளைப் பற்றியும், அதன் தொழில்நுட்ப விசயங்களைப் பற்றியும் அளவுக்கு அதிகமாக விவாதித்தது. அதற்க்கு இந்நூலின் ஆசிரியர் ராணுவ மார்சலாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் இந்நூல் ஸ்டாலின்கிராட் வீதிகளில் நடக்கும் போரைப்பற்றியும் அதிகமாக விவாதித்தது. இந்நூல் ஸ்டாலின்கிராட் நகரைப் பற்றி அறிந்த ஒரு ராணுவ வீரருக்கு ஒரு சிறந்த நூலாக இருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற ஸ்டாலின்கிராட் நகரின் வீதிகளைப் பற்றித் தெரியாத ஒரு சாதாரண வாசகனைக் கவராதது ஆச்சரியம் இல்லை!. மிகக் குறைந்த பட்சம் இந்நூலை மொழி பெயர்த்த ஆசிரியர் ஸ்டாலின்கிராட் நகரின் வீதிகளின் வரை படத்தையும், ஒரு சாதாரண வாசகனுக்கு அதிகப்படியானது என்று தோன்றக்கூடிய விசயங்களைத் தவிர்த்திருந்த்தும் கொடுத்திருந்தால், இந்நூல் தமிழில் ஒரு மிக நல்ல வரலாற்று நூலாக அமைந்திருக்கும்.

ஒரு நூலை மொழி பெயர்க்கும் போது வரிக்கு வரி மொழி பெயர்க்காமல், அது சொல்ல வரும் கருத்துக்களை உள்ளூர உணர்ந்து பின் அதனை மொழி பெயர்த்தால் மிக நன்றாக அமையும். எனக்குத் தெரிந்த வகையில் மொழி பெயர்ப்பு நூல்களில் மிகச் சிறப்பாக அமைந்தது "யயாதி". இது ஒரு புராண நூல். இதன் ஆசிரியர் வி.ஸ.காண்டேகர். யயாதி என்பவன் நகுச மன்னனின் மகன். இவனுடைய மனைவியர் , அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியார் மகள் தேவயானி மற்றும் அசுர மன்னனின் மகள் சர்மிஷ்டை(2*). இது ஒரு புராண நூல் என்பதற்கு மேலாக எனக்கு அது ஒரு தத்துவ நூலாகவேப்பட்டது. நான் இப்படி கூறுவதற்கு மிகச் சிறந்த உதாரணம் சர்மிஷ்டைக்கு, கசன் எழுதிய வாழ்கையைப் பற்றியக் கடிதம். அக்கடிதத்தில் அவ்வளவு தத்துவங்கள் பொதிந்திருக்கும். பொதுவாக மொழி பெயர்ப்பு நூல்களிலேயே மிகக் கடினமானது தத்துவ நூல்களை மொழி பெயர்ப்பதே. இதில் வரிக்கு வரி, ஏன் சொல்லப் போனால் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்துவிடும் அபாயம் உண்டு. அதையும் தாண்டி இந்நூலை அவ்வளவு அழகாக மொழி பெயர்த்திருப்பர் கா.ஸ்ரீ.ஸ்ரீ . இந்நூல் படிக்கும்பொழுது ஒரு மொழி பெயர்ப்பு நூல் போன்றே தெரியாது. ஏதோ தமிழிலேயே முதன் முதலாக எழுதியது போலவேத் தோன்றும். எனக்குத் தோன்றிய வரையில் மொழி பெயர்ப்பாசிரியர்,
இந்நூலின் மூல நூலை முழுவதுமாகப் படித்துணர்ந்து, பின் அதன் கருத்துக்களை மட்டுமே கொண்டுத் தானே, புதிதாகத் தமிழில் எழுதியிருந்த்திருப்பார். அவ்வளவு அருமையாக இருக்கும் இந்நூல்.

இதே மொழி பெயர்ப்பு விதிகள் மொழி மாற்றுத் திரைப்படங்கள், நாடகங்களுக்கும் பொருந்தும் (Here i am speaking about dubbing not remaking!). திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் என்று வரும்போது, இன்னொரு கஷ்டம் கூடவே சேரும், உதட்டசைவிர்க்கேற்ப்ப வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பது!. அதுவும் பாடல் காட்ச்சிகள் என்றால் அது அதை விடக் கஷ்டம். எனக்குத் தெரிந்த வரையில் தமிழில் வந்த மொழி பெயர்ப்புத் திரைப்படங்களிலாகட்டும், நாடகங்களிலாகட்டும் மிக மோசமானது, தூர்தர்சனில் ஒளிபரப்பான ஜுனூன் தொடரே. அதில் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்திருப்பார்கள். அவ்வளவு மோசமாக இருக்கும்.

இது போல் அல்லாமல் மொழிமாற்றுத் திரைப்படங்களிலேயே மிகச் சிறப்பாக அமைந்த திரைப்படங்களும் உண்டு. ஒரு பேட்டியின் போது யாரோ ஒருவர் "சலங்கை ஒலி " த் திரைப்படம் ஒரு மொழி மாற்றுத் திரைப்படம் என்றுக் கூறினார். எனக்கு அவர் கூறும் வரை அத்திரைப்படம் ஒரு மொழி மாற்றுத் திரைப்படம் என்றே தெரியாது. இத்தனைக்கும் அத்திரைப்படத்தில் பாடல்கள் அனைத்தும் அவ்வளவு அருமையாக இருக்கும்.

படிக்கும் வாசகனுக்கோ அல்லது பார்க்கும் ரசிகனுக்கோ, இது ஒரு மொழி பெயர்ப்புப் படைப்பு என்றுச் சொல்லும் வரைத் தெரியக் கூடாது. அதுவே மொழி பெயர்ப்பின் வெற்றி!

P.S:

1. அந்நாட்களில் இந்திய, ரஷ்ய நாடுகளுக்கிடையே கலாச்சார ஒற்றுமையை ஏற்ப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றுள் ஒன்று இந்திய, ரஷ்ய மொழி நூல்களை ஒரு மொழியிலிருந்து மற்ற மொழிகளுக்கு மொழி பெயர்ப்பது. மேலும் அந்நூல்கள் இலவசம் என்று கூறத்தக்க வகையில் மிகக் குறைந்த விலையில் இந்தியாவில் விற்கப்பட்டன. இந்நூல்கள் ரஷ்யாவிலேயே அச்சிடப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டன.

2. சர்மிஷ்டை கதாப்பாத்திரம் மிகச் சிறப்பாக இருக்கும். எனக்கு ஏதோ அந்தக் கதாப்பாத்திரத்தின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது, ஏன் "சர்மிஷ்டை" என்ற பெயரின் ஒலியிலேயே ஒர் ஈர்ப்பு இருந்ததைப் போன்று எனக்கு ஒருத் தோற்றம் . யயாதி நூலில் தேவயானியின் கதாப்பாத்திரம் ஒரு வில்லி போன்றும், சர்மிஷ்டையின் கதாப்பாத்திரம் ஒரு பொறுமையான, அழகான பெண்ணின் கதாப்பத்திரமாகவும் அமைந்த்திருக்கும்.

Tuesday, October 13, 2009

என்னுடைய பார்வையில் தூர்தர்சன்

ஒரு காலத்தில் தொலைக்காட்சி என்றாலே அது தூர்தர்சனாக மட்டுமே இருந்தது. 1959 முதல் தற்போது வரை தன்னாட்சி நடத்தி வருகிறது. இந்தாண்டு தூர்தர்சன் தன்னுடைய பொன்னாண்டைக் கொண்டாடி வருகிறது. 1982 (தேசிய ஒளிபரப்பு தொடங்கிய ஆண்டு) முதல் 1996 வரையிலான ஆண்டுகள் தமிழகத்தைப் பொறுத்தவரை, தூர்தர்சனின் பொற்காலங்கள் என்று சொல்லலாம். சன் தொலைக்காட்சி 1993 ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டாலும், 1996 ஆம் ஆண்டு தேர்தலில்தான் அது தன் ஆக்டோபஸ் கரங்களைப் பரப்பத்தொடங்கியது (ஏன் அந்த்தாண்டு தமிழகத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் ஒரு முக்கியப் பங்கே வகித்தது!). அதுவரை தூர்தர்சனே தமிழகத்தில் கோலோட்சியது!.

தூர்தர்சன் தமிழகத்தில் தன்னாட்சி நடத்திய காலங்களில், முழுநேரமும் தமிழ் ஒளிபரப்பு இருக்காது . பகுதி நேரம் மட்டுமே தமிழ் ஒளிபரப்பு இருக்கும். மற்றைய நேரங்களில் ஹிந்தி தான் . அதனுடைய ஒளியும் ஒலியும், ஞாற்றுக்கிழமை தமிழ்த் திரைப்படம்,செவ்வாய்க்கிழமை தமிழ் நாடகங்கள் மிகப் பிரபலமானவைகள். ஒரு தமிழ் திரைப்படத்தில் கூட ராதா ரவி, இனி ஒளியும் ஒலியும்் நிகழ்ச்சியை அரைமணி நேரத்திற்கு பதிலாக ஒரு மணி நேரம்னு ஆக்கிருவோம், எல்லாப் பயலும் நமக்கே ஓட்டக் குத்திருவாய்ங்க என்று கூறுவார் (அதற்க்கு வெகு காலத்திற்குப் பிறகு ஒளியும் ஒலியும்் அரை மணி நேரத்திற்கு பதிலாக ஒரு மணி நேரம் ஆனது வேறு விஷயம :) ) . அந்த அளவிற்கு ஒளியும் ஒலியும் மிகப் பிரபலம் .

ஞாயிற்றுக்கிழமைத் திரைப்படங்கள் எவ்வளவு அரதப் பழசாக இருந்தாலும் மக்கள் உட்கார்ந்துப் பார்த்தார்கள். ஞாயிற்றுக்கிழமைத் திரைப்படம் M.G.R படமாக அமைந்துவிட்டால் அவ்வளவுதான். எங்கள் வீட்டில் உட்கார இடம் கிடைக்காது. ஊரில் உள்ள மொத்த ஜனமும எங்கள் வீட்டில் கூடிவிடும். அந்தச் சமயத்தில் நாங்கள் இருந்த ஊரில் மிகச் சில வீடுகளில் தான் தொலைக்காட்ச்சிப் பெட்டி இருந்தது. தொலைக்காட்ச்சிப் பெட்டி இருந்த மற்ற வீடுகள் சற்றுப் பணக்கார வீடுகள் ஆதலால், மக்களை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். எங்கள் வீட்டில் கூட்டம் அதிகமாகி விட்டால்,எங்கள் அப்பா தொலைக்காட்ச்சிப் பெட்டியை எடுத்து வீட்டிற்கு வெளியே காம்பௌன்டில் வைத்துவிடுவார்கள். அவ்வளவு மக்களை வீடு கொள்ளாது!.

தூர்தர்சனின் மற்றொரு அழிக்கமுடியாத அடையாளம் "தடங்கலுக்கு வருந்துகிறோம்!". நிச்சயம் ஞாயிற்றுக்கிழமைத் திரைப்படம் ஒளிபரப்பாகும்போது, குறைந்தது இரண்டு மூன்று முறையாவது தடங்கலுக்கு வருந்துவார்கள் ;) .

அக்காலங்களில் தூர்தர்சனை விட்டால் பெரிதாக வேறு பொழுதுபோக்கு ஊடகங்கள் எதுவும் கிடையாது. மக்கள் எதை ஒளிபரப்பினாலும் பார்த்தார்கள், மொழி புரியாவிட்டலும் கூட!. அப்பொழுது சனிக்கிழமைகளில் ஹிந்தித் திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள். நாங்கள் எங்கள் தந்தையின் அருகில் அமர்ந்து அவர் மொழி பெயர்த்துத் தரத் தரப் பார்த்துக்கொண்டிருப்போம். நாங்கள் எல்லாம் சித்ரகார், ரங்கோலிக்குக் காத்திருந்த நாட்களை இப்பொழுது எண்ணிப் பார்க்கும்போது, சற்றுச் சிரிப்பாகக் கூட வருகிறது (அன்றிலிருந்து இன்று வரை ஹிந்தி கற்றுக்கொள்ளவேண்டும் என்ற என்னுடைய ஆசை நிறைவேறவில்லை ;) ). அந்த அளவு மக்கள் தூர்தர்சனைப் பார்த்தார்கள். ஒருவகையில் தூர்தர்சன் இப்படி தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தது எனலாம் ;).

சனிக்கிழமைகளில் ஒளிபரப்பான மாநில மொழித் திரைப் படங்களில் தமிழின் வரிசைக்காக காத்திருந்த ஞாபகங்கள் இன்னும் பசுமரத்து ஆணி போல் பசுமையாக உள்ளது. பெரும்பாலும் அத்திரைப்படங்கள் விருது பெற்றத் திரைப்படங்களாக இருக்கும். ஆதாலால் அவ்வளவு சுவாரசியமாக இருக்காது. இருந்தபோதிலும் அவற்றிர்க்காக காத்திருந்தோம். அந்நாளில் தான் சத்யஜித் ரே என்னும் இயக்குனர் எனக்கு அறிமுகமானார். அவருடைய படங்கள் பெரும்பாலும் சோகமும், அழுகையும்,வறுமையும் கொண்டதாகவே இருக்கும் .

இப்படி அக்காலங்களில் மக்கள் தூர்தர்சனின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வேறு வழியே இன்றிப் பார்த்தார்களா அல்லது விருப்பத்துடன்தான் பார்த்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. எப்படியாகிலும் அந்நாட்கள் தூர்தர்சனின் பொற்காலங்கள்.

பிறகு சிறிது சிறிதாக தமிழ் நிகழ்ச்சிகளின் நேரங்கள் அதிகரித்தன. சனிக்கிழமை ஹிந்தி திரைப்படம்,தமிழ் திரைப்படமானது. வெள்ளிகிழமைகளிலும் மேலும் ஒரு தமிழ் திரைப்படம் ஒளிபரப்பானது. பிறகு முழு நேர தமிழ் தூர்தர்சன் ஒளிபரப்பானது, ஒரு நல்ல பெயருடன், பொதிகை!.

எனக்கு தூர்தர்சனில் மிகப் பிடித்த நிகழ்ச்சிகள் அதனுடைய புராணத் தொடர்களும்,வரலாற்றுத் தொடர்களுமே. தூர்தர்சன் மூலமே நான் மகாபாரத்தையும்,ராமாயணத்தையும் அறிந்து கொண்டேன். மேலும் ஒவ்வொரு தொடரின் தலைப்புப் பாடல்களும் மிக அருமையாக இருக்கும். "மஹாாாாா பாாாாரதம்" என்ற அந்த நீண்ட ராகத்தை யாரால் மறக்க முடியும். அந்த வகையில் "சித்தீதீதீ" வகையராப் பாடல்களுக்கு அதுவே முன்னோடி!. ஹனுமானைப் பற்றிய புதிய செய்திகளையும் அதைப் பார்த்தே தெரிந்து கொண்டேன்!. ஓம் நமச்சிவாயாவும் என்னுடைய விருப்பத்திற்குரிய தொடராக இருந்தது. இப்படி எனக்கு புராணத்தையும் அதன் மீது ஒரு பிடிப்பையும் ஊட்டியது தூர்தர்சனே!.

தூர்தர்சனின் வரலாற்றுத் தொடர்களும் மிகப் பிரபலம். "Meh Delhi hoon!" . எவ்வளவு ஒரு அருமையான தொடர். "நான் டில்லி மாநகரம் பேசுகிறான் " என்று அத்தொடர் தொடங்குவதே மிக அருமையாக இருக்கும். இத்தொடரின் மூலமே, டில்லி மாநகரின் வரலாற்றையும், அது தசா அவதாரங்கள் எடுத்த நகரம் என்பதையும் அறிந்து கொண்டேன். அதில் தெரிந்துகொண்ட ப்ரித்விராஜ் சௌகான், சம்யுக்தா காதல் என்னவொரு உண்மையான மெய் சிலிர்க்கும் காதல்!. நிச்சயமாக சினிமாவில் கூட நாம் அத்தகைய காதலைக் காண முடியாது. காதல், வீரம், தீரம் இப்படி ஒரு நிஜ கதாநாயகனுக்குரிய அனைத்து அம்சங்களும் நிறைந்த வரலாறு ப்ரித்விராஜ் சௌகானுடயது.(முகம்மது கவுரியுடனான முதல் போரில், ப்ரித்விராஜ் சௌகான், காவ்ரியை மன்னித்து விடாமல்விட்டிருந்தாலோ அல்லது காவ்ரியுடனான இரண்டாம் போரில் ப்ரித்விராஜ் சௌகானின் மாமனாரான ஜெயச்சந்திரனின் உதவி கிடைத்திருந்தாலோ ஒருவேளை இன்று இந்தியாவின் நிலைமை மாறி இருக்கலாம் :) ). அதனால் தான் இன்று வட இந்தியாவில் பிறக்கும் பல குழந்தைகளின் பெயர்கள் ப்ரித்விராஜ் என்றிருக்கின்றன!.

தூர்தர்சனில் வந்த சில பயனுள்ள மற்றும் பிரபலமாக அமைந்த நிகழ்ச்சிகளில் ஒன்று சுரபி. நிச்சயமாக அதன் பெயருக்கு ஏற்றபடி அது சுரபியாகத்தான் அமைந்திருந்தது. ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு புது செய்தியைத் தருவதாகவோ அல்லது ஒரு புது ஊரைப்பற்றிக் கூறுவதாகவோ அல்லது ஏன் ஒரு புது பதார்த்தத்தைத் தயாரிப்பது பற்றி கூறுவதாகவோ அது அமைந்திருந்தது. Anupam Kher பங்கேற்று நடத்திய ஒரு நிகழ்ச்சி, அறிவை வளர்ப்பதாக அமைந்திருக்கும். அவர் பொது அறிவு சம்பந்தமாக ஒரு கேள்வியைக் கேட்பார்,சரியான பதில் கூறுவோருக்கு தங்கக் காசு பரிசு. அதுவும் ஒரு பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. இப்படியாக எனக்கு பொது அறிவு மீது தாகத்தை ஏற்ப்படுத்தியதில், தூர்தர்சனுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

தூர்தர்சனில் வந்த விளம்பரங்கள் கூட மிக அருமையாக இருக்கும். சுரபி நிகழ்ச்சியின் போது ஒளிபரப்பான AMUL, என்ன ஒரு அருமையான விளம்பரம். AMUL, The taste of India என்று கேட்பதே மிக அருமையாக இருக்கும். அந்த விளம்பரத்தைக் கேட்க்கும்போது AMUL (Anand Milk Union Limited. ஆச்சரியமாக அமுல் என்பதற்கு சமஸ்கிருதத்தில் அமிர்தம் என்று பெயர்! மேலும் AMUL யே இந்தியாவின் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டது!). இது குஜராத்தின் ஒரு co-operative நிறுவனமாக இருந்தபோதிலும், அது ஏதோ இந்தியாவின் brand ambassador என்பதைப் போலவே தோன்றும் ! அந்நிறுவனமும் தன்னை அவ்வாறே முன்னிருத்திக்கொள்ளவும் செய்யும்!. ஒ மறந்தே விட்டேனே Nirma, Washing powder nirma!. அனைத்து வீடுகளிலும் ஒளித்த விளம்பரம். அந்த விளபரத்தையும், அதில் வந்த அந்த சிறு பெண்ணையும் எப்படி மறக்க முடியும்.

தூர்தர்சனின் மற்றுமொரு மிகப் பெரிய சாதனை தேசிய ஒருமைப்பாட்டை ஊட்டியது. அதில் வந்த "Mile sur mera tumhara" பாடல் என்னவொரு அருமையான பாடல். அதைக்கேட்க்கும் போது இப்பொழுதும் எனக்கு மெய் சிலிர்க்கும். அந்தப் பாடல் ஒளிபரப்பாகும் போது, அதில் வரும் தமிழ் வரிக்காக மிக ஆவலுடன் காத்திருப்போம். ஆகா இந்திய தேசிய ஒருமைப்பாட்டுப் பாடலில் தமிழுக்கும் இடம் இருக்கிறது என்று என்னும்போது மிகப் பெருமையாக இருக்கும்.




அதே போல் அதில் வந்த மற்றுமொரு சிறந்த பாடல் "Baje Sargam". இப்பாடலில் ஒவ்வொரு மாநிலங்களுக்கே உரிய நடனங்களை காணும் போதும் மெய் சிலிர்க்கும். அதிலும் ஒவ்வொரு முறையும் பாரத நாட்டியம் வருவதை மனம் ஆவலுடன் எதிர்பார்க்கும். இத்தகைய நடனங்களையோ அல்லது இசையையோ உணர்ந்து ரசிக்கும் திறமை இல்லாதிருந்தபோதிலும் , நம் இந்தியா இத்துணை சிறப்பும், இத்தகைய பழம்பெருமையும், வேற்றுமையில் ஒற்றுமை கொண்டிருப்பதை காணும்போது மிக சிலிர்ப்பாக இருக்கும். இவ்வாறாக தேசிய ஒருமைப்பாட்டை ஊட்டுவதில் தூர்தர்சனுக்கு நிகர் தூர்தர்சனே.



தூர்தர்சனின் மற்றுமொரு முக்கியமான அம்சம் அதன் comercial சாராத நிகழ்ச்சிகள். எ.கா : வயலும் வாழ்வும். இந்நிகழ்ச்சியை எத்துனை விவசாயிகள் பார்ப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் பார்பவர்களுக்கு ஒரு நிச்சயம் அது ஒரு பயனுள்ள நிகழ்ச்சி. அதேபோல் வியாபாரம் கருதி அமையாமல், உண்மையான நோக்கத்திற்காக அமைந்த மற்றொரு நிகழ்ச்சி காது கேளாதோருக்கான செய்திகள்.

தூர்தர்சனும் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளத்தான் செய்கிறது. DD News, DD Sports, DD Loksabha, DD for regional languages போன்றவை அதற்கான சில எடுத்துக்காட்டுகள். இருந்தபோதிலும் satellite channel களுடன் போட்டியிட அது இன்னும் பல படி முன்னேறி வரவேண்டும்.

இப்படி என்னுடைய பாலப் பருவத்தில் என்னைச் செதுக்கிய தூர்தர்சன், பொன் விழா கொண்டாடும் இத்தருணத்தில் மேலும் பல பயனுள்ள நிகழ்ச்சிகள் தருவதற்கும், காலத்துடன் போட்டியிடுவதற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

Saturday, October 10, 2009

Comedy Nicolas Sarkozy

Nicolas Sarkozy, பிரெஞ்சு அதிபர். எனக்கு ஒரு வகையில் பிடித்த அதிபர் என்றே சொல்லலாம். அவருடைய சில முடிவுகள் மிகவும் bold ஆக இருக்கும் (தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, Carla Bruni ஐ மணம் செய்ததைச் நான் சொல்லவில்லை ;) ). சென்ற ஒலிம்பிக்கின் போது, திபெத் பிரச்சினை பெரிதாக கிளம்பியது. அப்பொழுது சீனா, திபெத் பிரச்சினையை ஒழுங்காக கையாளாவிட்டால், பிரான்ஸ் ஒலிம்பிக்கிற்கு வருவதைப் பற்றி மறு பரிசீலனை செய்யும் என்று அறிவித்தார். Sarkozy இப்படி bold ஆன முடிவுகளுக்கு மட்டுமல்லாமல், Carla Bruni யுடனான காதலுக்காகவும் பெரிதாக அறியப்படுவார். அந்த அளவிற்கு Sarkozy - Carla Bruni காதல் மிகப்
பிரபலமானது.

ஆனால் இப்பொழுது சொல்லபோகும் விஷயம் சற்று வேறு விதமானது. சொல்லபோனால் comedy ஆனதும் கூட. Sarkozy சற்றுக் குள்ளமானவர். Carla Bruni யை விட குள்ளமானவர். ஏன் Napolean ஐ விட குள்ளமானவர் (Sarkozy 5'6" , Napolean 5'7" ) அவருக்குத் தான் குள்ளமானவர் என்ற தாழ்வு மனப்பான்மை உண்டு என்றும் கூட கூறுவார்கள். மற்ற அதிபர்களுடனான official photo session இன் போது கூட சடாரென்று தன் குதிங்காளில் நின்று தன்னை உயரமானவராககக் கட்டிக் கொள்வார் என்று குற்றம் சாட்டப்படுபவர் .

சரி தற்போதைய செய்தி என்னவென்றால், நார்மண்டி இல் உள்ள ஒரு தொழிர்ச்சாலைக்குச் Sarkozy சென்றபொழுது, அவரைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவரை விட குள்ளமானவராக இருக்கும் படி பார்த்துகொள்ளப்பட்டார்கள என்று கூறப்படுகிறது. This is a hot news in France at now. இதனை அந்த தொழிற்ச்சாலை வதந்தி என்று கூறிவிட்டது, Elysée மாளிகையும் இச்சேதியை வன்மையாக கண்டித்துவிட்டது. Elysée மாளிகை என்பது பிரெஞ்சு அதிபதிரின் அதிகாரப்பூர்வ மாளிகை. இருந்தபோதிலும் பத்திரிக்கைகள் விடுவதாக இல்லை. மேலும் இந்த விஷயம் ஆரம்பம் அல்ல, இந்த ஆண்டு ஜூன் மாதம் Normandy பேச்சின் போது, அவருக்கென்று ஒரு மரப்பெட்டி வைக்கப் பட்டு அதன் மீது ஏறி நின்று பேசினார். அதுவே அப்பொழுது பத்திரிக்கைகளில் பெரிதாகப் பேசப்பட்டது.

Photo courtesy : http://timescorrespondents.typepad.com/

மேலும் Carla Bruni, தான் தன் கணவருடன் photo விற்கு போஸ் கொடுக்கும்போது, சாதாரண flat செருப்பையே உபயோகிக்கிறார். Sarkozy பயன்படுத்துவதோ high heels வைத்த shoe.


Photo courtesy : http://img.metro.co.uk/

Sarkozy இன் குள்ள உருவத்தால் cartoonist ட்டுகளுக்குத்தான் கொண்டாட்டம். அவருடைய குள்ள உருவத்தை விதவிதமாக வரைந்து தள்ளுகிறார்கள் (குள்ள உருவமாக, நாற்காலியின் மீது ஏறி நிற்பது போன்று இப்படி பல வகைகளில்!)

இப்படி
பிரெஞ்சு அதிபதிரின் காதல் காவியமும், காமெடியும் ஒன்றாக கலந்து உலகை வளம் வருகின்றன!

P.S:

he is a president of powerful France ... more than that what he want .. why he behave like a person who have short-man syndrome

Friday, October 9, 2009

எண்ணங்களுக்கும் மணம் உண்டு!


பழைய நினைவுகளை அசைபோடுவதே என்பதே ஒரு மகிழ்ச்சியான செயல்தான். பெரும்பாலும் இச்செய்கைகள் எண்ணப்படுபவைகளாக அமைவதில்லை, தூண்டப்படுபவைகளாகவே அமைகின்றன. ஒரு நாளில் நடைபெறும் ஏதேனும் சிறு செயல்கள் ஒன்றோடொன்று பின்னப்பட்டு பின்னோக்கிச் சென்று பழைய நினைவுகளில் சென்று முடிவடைகின்றன. அவையும் உடனே முடிவடைவதாக இருப்பதில்லை, அந்தப் பழைய நினைவுகள் மேலும் பின்னிப் பிணைந்து மேலும் மேலும் பழைய நினைவுகளைத் தூண்டுகின்றன. ஏதேனும் ஒரு சிறு சம்பவம் தூண்டுகோலாக அமைந்து, எதிலோ ஆரம்பித்து எதிலோ முடியும் நம் எண்ண அலைகளை எண்ணும்போது, மனதைக் கண்டு வியக்கத்தான் தோன்றுகிறது!.

எண்ணங்களைத் தூண்டுவதற்கு ஏதேனும் சம்பவங்கள்தான் வேண்டும் என்பதில்லை, ஏதேனும் ஒரு பாட்டோ, ஒரு பெயரோ அல்லது ஒரு குறிப்பிட்ட மணம் கூட எண்ண அலைகளைத் தூண்டி பழைய நினைவுகளுக்கு இழுத்துச் செல்லும். இந்த எண்ண அலைகள் மகிழ்ச்சி அளிப்பவையாகவோ அல்லது சற்று சங்கடம் அளிப்பவையாகவோ கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக என்னுடைய சிறு பிராயத்தில் விடுமுறை நாட்களில் மதுரையில் இருக்கும் எங்களுடைய மாமா மற்றும் பெரியம்மா வீடுகளுக்குச் செல்வது வழக்கம். அந்தத் தருணங்கள் மிக மகிழ்ச்சியான தருணங்கள். பொதுவாக ஒவ்வொரு பகுதிகளுக்கும் தனிப்பட்ட மணம் உண்டு. அவை அப்பகுதியில் உள்ள மண்,மரம்,செடி மற்றும் அவற்றிலுள்ள பூக்கள் ஆகியவற்றின் ஒரு கலவையான மணமாக இருக்கும். அதே போன்று எங்கள் பெரியம்மா வீடு அமைந்த பகுதிகளிலும் நான் ஒரு குறிப்பிட்ட வாசனையை நுகர்ந்திருக்கிறேன். பின் அந்த வீட்டிலிருந்து மாறி சென்னைக்கு என் பெரியம்மா குடி வந்துவிட்டார்கள். அவரைத் தொடர்ந்து நாங்கள்,எங்கள் மாமா என்று ஒவ்வொருவராக சென்னைக்கு குடி பெயர்ந்து, சென்னையே வீடு என்று ஆகிவிட்டது. மதுரையில் இருந்த எங்கள் பெரியம்மா வீட்டையும் மறந்து பல நாட்கள் ஆகிவிட்டன. பின் ஒரு நாள் சென்னையில் ஒரு வீதி வழியே நடந்து வரும்போது ஒரு வாசனையை நுகர்ந்தேன். மதுரையில் நான் என்ன வாசனையை நுகர்ந்தேனோ, அதே வாசனை. ஒரு நிமிடம் நான் சென்னையில் இருப்பதையே மறந்து, மதுரையில் இருப்பதாகவே உணர்ந்தேன். வீட்டிற்கு வந்த பிறகும் என்னால் அந்த எண்ண அலைகளிலிருந்து மீள முடியவில்லை. அந்த எண்ண அலைகள் மேலும் மேலும் பின்னோக்கிச் சென்று அந்த வீட்டில் நாங்கள் விளையாடி மகிழ்ந்த தருணங்கள், மிதி வண்டி பயில கற்றுக்கொண்ட தருணங்கள், இப்படி பலவித எண்ணங்களை தூண்டியது, அந்த கணப் பொழுதில் நான் நுகர்ந்த வாசனை. அந்த இரவு முழுவதும் தூங்கவே இல்லை. ஒரே எண்ண அலைகளாக வந்து மோதிக்கொண்டிருந்தன. மிக மகிழ்ச்சியான ஒரு இரவாக அது அமைந்தது. இப்படியாக மணங்கள் ஒரு நாளின் தன்மையையே தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டவைகளாக இருக்கும்.

நாங்கள் மிகச் சிறு வயதில் குடியிருந்த வீட்டில் இரண்டு நந்தியாவட்டை மரங்கள் இருந்தன . இன்றும் கூட நந்தியாவட்டை மலரை நுகரும்போது என் மிகச் சிறு வயதில் நாங்கள் இருந்த அந்த ஊரும் அந்த நாட்களும் ஞாபகம் வருகின்றன.

இப்படி மகிழ்ச்சியான தருணங்களை ஞாபகப்படுத்தும் அதே மணமானது சில சங்கடமான அல்லது ஒரு பயம் கலந்த தருணங்களையும் ஞாபகப்படுத்துகின்றன. அது நான் சென்னைக்கு கல்லூரியில் படிப்பதற்காக வந்த தருணம். நான் சென்னைக்கு புதிது, அதுவும் வீட்டை விட்டு முதல் முதலாக தனியாக வந்த தருணம். அப்பொழுது நான் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். எங்கள் விடுதியானது கல்லூரியிலிருந்து 1 km தள்ளி அமைந்த்திருந்தது. விடுதியிலிருந்து கல்லூரிக்கு நடந்துதான் செல்வோம். ஒவ்வொரு நாளும் கல்லூரி முடிந்து விடுதிக்கு நடந்து செல்லும் போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெதுவாக செல்வோம். ஏனென்றால் ராக்கிங் பயம்!. ஒவ்வொரு நாளும் கல்லூரி முடிந்து விடுதிக்கு செல்வது என்பதே ஒரு பயம் கலந்த சம்பவமாகவே இருக்கும். இன்று எந்த சீனியரிடம் எப்படி மாட்டுவோமோ என்று பயமாகவே இருக்கும். அந்த விடுதிக்குச் செல்லும் வழியில் ஒரு குறிப்பிட்ட மணம் இருக்கும். எட்டு வருடம் கழித்து இன்றும் கூட அந்த வழியாகச் செல்லும் போது, அந்த மணத்தை நுகரும்போது ஒரு பதற்றம் கலந்த பயமானது ஒரு கணமேனும் என்னுள் எட்டிப் பார்க்கிறது!.

இதே போன்று சில காரணங்களால் ரோஜா மலரின் மணமும், சில ஊதுபத்திகளின் மணமும் எனக்குப் பிடிக்காது. நிச்சயமாக என்னுடைய கல்யாண மாலை ரோஜா மாலையாக இருக்காது! ;)

இப்படி ஒவ்வொரு சம்பவமும் குறிப்பாக உங்களைப் பாதிக்கும் ஒவ்வொரு சம்பவமும் அவற்றிருக்கென்று தனி மணத்தையோ அல்லது ஏதேனும் ஒரு மணத்துடன் தொடர்போ கொண்டிருக்கின்றன. அந்த மணமானது ஏதேனும் ஒரு பொழுது எட்டிப் பார்க்கும்பொழுது, உங்களையும் அறியாமல் அந்த சம்பவங்களும் எட்டிப் பார்க்கின்றன.

இப்படியாக சம்பவங்கள் ஏதேனும் ஒரு மணத்துடன்தான் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று இல்லை, அவை வேறு ஏதேனும் ஒன்றுடனோ, ஏன் ஒரு பாட்டுடனோ கூட தொடர்பு கொண்டிருக்கலாம். நான் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது வெளிவந்த ஒரு படத்திலிருந்த "வாடி வாடி நாட்டுக்கட்டை" பாடல் மிகப் பிரபலம். ஆனால் அது எனக்குப் பிடிக்காது. காரணம், அச்சமயம் நான் என்னுடைய முதல் செமஸ்டருக்காக சிறிது பயத்துடன் படித்துக்கொண்டிருந்த தருணத்தில் அதிகமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடல் (நான் படிக்கும் போது எப்பொழுதும் ஏதேனும் வானொலியோ அல்லது தொலைக்காட்ச்சியோ ஓடிக்கொண்டிருக்க வேண்டும்!). ஆகையால், அந்தப் பாடல் கேட்க்கும் போது என்னுடைய முதல் செமஸ்டர் ஞாபகமும்,அத்துடன் அந்த முதல் செமஸ்டர ஏற்ப்படுத்திய பயமும் இன்றும் எட்டிப் பார்க்கும். ஆதலால் அந்தப்பாடலுக்கு என்னுடைய playlist இல் இன்று இடம் கிடைக்காமல் போய்விட்டது !.

இப்படியாக நமது எண்ணங்கள் ஒன்றோடொன்ரோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றுருடன் தொடர்பு கொண்டவைகளாக இருக்கின்றன. They are behave just like an atom bomb. A single ignition creates chain reactions!.

ஆக எண்ணங்களுக்கும் மணம் உண்டு! ்

photo courtesy :http://www.merello.com/images/Photos%20Sketches/art_paintings_art_exhibitions_modern_still_lifes.merello._flores_amarillas.jpg.jpg

நக்சலிசம்,அழிக்கப்படவேண்டிய ஒன்று

நக்சலிசம், இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மிக படு பயங்கர நோய். நக்சலைட்டுகள் மேற்குவங்க மாநிலத்தில், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல் என்னும் ஊரில் முதன் முதலில் பயிற்ச்சி மேற்க்கொன்டார்கள். அதனாலயே அவர்கள் நக்சலைட்டுகள் என்று அழைக்கப்பட்டார்கள். நக்சலிசம் முதலில் சிறிய அளவில் தான் இருந்தது. ஆனால் இன்றோ அது மிகப் பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறது. இந்திய விமானப் படையின் விமானத்தையே குறி பார்க்கும அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.

என்னைப் பொறுத்தவரை தீவிரவாதம் அழிக்கப்படவேண்டிய ஒன்று. அதிலும் உள்நாட்டுத் தீவிரவாதம் என்பது வெளியிலிருந்து வரும் தீவிரவாதத்தைவிட மோசமான ஒன்று. நக்சலைட்டுகளை இந்திய அரசு இந்த அளவிற்கு வளர விட்டிருக்கக்கூடாது. முளையிலேயே கிள்ளி எறிந்த்திருக்கவேண்டும். நக்சலைட்டுகளை அழிப்பதற்கு ராணுவம் அழைக்கபடவேண்டும். ராணுவத்தை அழைப்பதில் கௌரவக் குறைச்சல் ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. நம் மண்ணும், நம் மக்களும் ரொம்ப முக்கியம். அதனால் நம் உள்நாட்டில் தீவிரவாதம் உள்ளது என்பதை ஒத்துக்கொண்டு, அதை அழிக்க ராணுவத்தை உடனடியாக அழைக்க வேண்டும்.

நக்சலிசம் என்பது வெறுமனே தீவிரவாதம் மட்டும் அல்ல. அது ஒரு சமூக, பொருளாதாரப் பிரச்சினை. நக்சலிசம் இந்த அளவிற்கு வளர்ந்ததிற்கு, அது வளர்ந்துள்ள பகுதிகளின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளும் ஒரு முக்கிய காரணம். பொதுவாக நக்சலிசம் வளர்ந்துள்ள பகுதிகளைப் பார்த்தீர்களானால், அவை பெரும்பாலும் சமூக, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவைகளாகவே உள்ளன. ஆகையால் நக்சலைட்டுகள் அழிக்கப்பட்ட பிறகு, அது வளர்வதற்கு ஆணி வேரான சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளையும் களையவேண்டும். அப்பகுதிகளின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்படவேண்டும். அப்பகுதிகளில் மேலும் பல வேலைவாய்ப்புகளை ஏற்ப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் அப்பகுதி இளைஞர்கள் நக்சலிசம் பக்கம் செல்லாமல் இருப்பார்கள்.

நாம் இன்னும் பல காலத்திற்கு தீவிரவாதத்திக்கு, பாகிஸ்தானையே மட்டும் குறை சொல்ல முடியாது. நம் மண்ணிலும் களைகள் உள்ளன. அவையும் களையப்படவேண்டியவையே.

நமது ஊடகங்களும் நக்சலிசம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மேலும் அதிக முக்கியத்துவம் வேண்டும். பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாதத்திற்கு கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவம், நக்சலைட்டுகள், ஒரு காவல் நிலையத்தை எரிப்பதையும் , பீகாரில் புகுந்து இருபது அப்பாவி பொதுமக்களை அழிக்கும் செயலைக்் கண்டிப்பதற்கும் அவற்றை மக்கள் முன் எடுத்துச் செல்வதற்கும் முக்கியத்துவம் தரவேண்டும்.

நக்சலிசம் மாவோஸ்ட்டுகள், உல்பா உள்ளிட்ட அனைத்துத் தீவிரவாத இயக்கங்களும் வேருடனும் வேரடி மண்ணுடனும் ஒழிக்கப்படவேண்டும்். வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மத்திய மாநிலங்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும். அப்படி செய்தால்தான் நக்சலைட்டுகளை ஆணி வேருடன் அழிக்க முடியும்.

Wednesday, October 7, 2009

யவன ராணியும் பொன்னியின் செல்வனும் - 2

யவன ராணியின் கதாநாயகன், ஒரு கதாநாயகனுக்குரிய அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருப்பான். ஒற்றாடல்
ஆகட்டும், போர்த் தந்திரம் ஆகட்டும், காதல் ஆகட்டும், போரிடுதல் ஆகட்டும், போர் வீயுகம் அமைப்பதில் ஆகட்டும், ஆகிய அனைத்திலும் ஒரு கதாநாயகனுக்குரிய அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருப்பான்.

பொன்னியின் செல்வனின் கதாநாயகன் வந்தியத்தேவனுக்குச் சற்றுத் திறமை குறைவே. ஒற்றாடலிலும், போர்த் திறனிலும், காதல் காட்சிகளிலும், இளஞ்செழியனைவிடச் சற்றுக் குறைவே. என்னுடைய அண்ணன் ஆனந்த் கூறியபடி , வந்தியத்தேவன் ஒரு comedy க் கதாநாயகனாகவேத் எனக்குத் தோன்றினான் ;).

பொன்னியின் செல்வனில், அருள்மொழிவர்மனின் தீரத்தை எடுத்துரைக்க சில இடங்கள் அமைந்திருக்கும். யானை மீது ஏறி விரட்டிச் செல்லும் காட்சிகளும், இலங்கையில் மகுடம் ஏற்க மறுத்துரைக்கும் காட்சிகளும், அருள்மொழிவர்மன் மீது ஒரு ஈர்ப்பை ஏற்ப்படுத்தும்.

ஆனால் கதையின் திருப்பங்களிலும் சரி, கதையின் முடிச்சுகளை அவிழ்ப்பதிலும் சரி, கல்கி மிக நன்றாக கையாண்டிருப்பார். மேலும் பொன்னியின் செல்வன் நாவல் சற்று நகைச் சுவை கலந்தும் இருக்கும். ( இதில் குறிப்பாக எனக்கு ஒரு சம்பவம் பிடிக்கும். வந்தியத்தேவன் ஒரு பாழடைந்த மண்டபத்தின் வாயிலில் இருந்து, உள்ளே யார்? என்று கேட்பான். அதற்க்கு உள்ளே இருந்து ஒரு சிறு குழந்தை நீ புலியா? என்று கேட்கும். அதற்க்கு வந்தியத்தேவன் இல்லை குதிரை என்று பதிலுரைப்பான். அதற்க்கு அச்சிறுவன் குதிரை எங்காவது பேசுமா? என்று கேட்பான். அதற்க்கு வந்தியத்தேவன், பின் புலி எங்காவது பேசுமா? என்று திரும்பிக் கேட்ப்பான. இக்காட்சி மிக நன்றாக அமைந்திருக்கும்). அந்த வகையில் பொன்னியின் செல்வன், யவன ராணியை விட சிறந்ததாக இருக்கும்.

இவ்விரு நாவல்களிலும் பெண்களின் பங்கு மிக அபாரமாக இருக்கும். சொல்லப்போனால், இரண்டு நாவல்களின்ஓட்டத்திற்கும் பெண்களே காரணமாக இருப்பார்கள். யவன ராணியில், யவன ராணியும், பொன்னியின் செல்வனில் நந்தினியும் மற்றும் குந்தவையும் மிகப் பெரிய பங்காற்றியிருப்பார்கள். இதிலும் என்னை அதிகமாக ஈர்த்தது யவன ராணியே.

பொதுவாக சரித்திர நாவல்களைச் சிறப்பாக ஆக்குவது ஒற்றாடலும், பின் வருவனவற்றை முன்பே யூகித்து அதற்க்கேற்ப்ப வியூகம் அமைப்பதே ஆகும். பொன்னியின் செல்வனில் ஒற்றாடலை ஆழ்வார்க்கடியான் மிகச் சிறப்பாகச் செய்திருப்பார். வியூகம் அமைப்பதின் மிகச் சிறப்பான பகுதிகளை நந்தினியும், அமைச்சர் அநிருத்ர பிரம்மராயரும, பொன்னியின் செல்வனும் பகிர்ந்து கொள்வார்கள். பொன்னியின் செல்வனில் கதாப்பாத்திரங்களின் எண்ணிக்கையும், ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுக்கான முக்கியத்துவமும், யவன ராணியைவிட அதிகமாக இருக்கும் .
இப்படி பொன்னியின் செல்வனில் பலரும் பெரும் பங்குவகிப்பார்கள். அதுவே அதன் பலமும், பலவீனமும் ஆகும்.

யவன ராணி மிகச் சிறப்பாக அமைந்ததற்கு மற்றொரு காரணம், போர்!. பொன்னியின் செல்வனில் போர் கடைசி நிமிடம், பொன்னியின் செல்வனின் தியாகத்தால் தவிர்க்கப்படும். ஆக அங்கு heroism ஐ வெளிப்படுத்த வழி இல்லாமல் போய்விட்டது.

யவன ராணியில், எதிரிப் படை நாக வீயுகம் அமைக்கும் என்று யூகித்து, அதை எதிர்கொள்ள கருட வீயுகம் அமைக்கும் சமயோசிதமும், அதை விளக்கியுள்ள முறையும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். இக்கட்டத்தில் இளஞ்செழியனின் விவேகமும், தீரமும் நன்கு வெளிப்படும்.

பொதுவாக நான் சரித்திர நாவல்கள் படிக்கும் போது, அதில் இருக்கும் வரைபடங்களைப் பார்க்கமாட்டேன். ஏனெனில், அவை நம் கற்பனையை ஈடு செய்யும் அளவிற்கும் இருக்காது. அதையும் தாண்டி என்னை மிகவும் கவர்ந்த அட்டைப்படம் யவன ராணியே. அதிலும் குறிப்பாக யவன ராணியின் படம் மிகச் சிறப்பாக இருக்கும். அதுவே இந்நாவல், பொன்னியின் செல்வனை விட என்னை அதிகம் கவர்ந்ததிர்க்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம் ;) .

பொன்னியின் செல்வனில் அவிழ்க்கப்படாத முடிச்சுகளும் ஏராளம் உண்டு. நந்தினியின் உண்மையான காதலன் யார்? வீர பாண்டியனா? அல்லது ஆதித்ய கரிகார்ச்சோழனா?. நந்தினியின் தந்தை யார்?. வீர பாண்டியனின் மகனின் உண்மையான தாய் யார்? இப்படி பல உண்டு. இப்படி பொன்னியின் செல்வன் நாவலில் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் பல இருப்பதற்குக் காரணம், இந்நாவல் வரலாற்றின் ஊடே அதிகமாக பயணித்தது் ஒரு காரணம் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. உண்மையில் ஆதித்ய கரிகார்ச் சோழன் இறந்ததற்கான காரணங்களும், அதற்குக் காரணமானவர்களையும் இன்றுவரை யாருக்கும் தெரியாது. பொன்னியின் செல்வனை, வரலாறு என்பதனைத் தவிர்த்து நாவல் என்று பார்க்கும் போது , இப்படி அவிழாத முடிச்சுகள் பல கொண்டு நிறைவடைந்த்திருப்பது எனக்கு நிறைவைத் தரவில்லை!.

சாண்டில்யன் கற்பனையை அதிகம் உபயோகப்படித்தி இருப்பார் என்பதும், அதற்கான களம் அவருக்கு அமைந்திருந்தது என்பதும், கல்கி வரலாற்றின் ஊடேயே அதிகம் பயணித்திருப்பார் என்பதால் அவருக்கான கற்பனைக் களம் குறைவாக அமைந்திருந்தது என்பதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. இருந்தபோதிலும் எனக்கு யவன ராணியே மிகவும் பிடித்திருந்தது. அதற்க்கு வாலிப பருவத்தின் வாயிலில் இருந்தபோது எனக்கு யவன ராணியின் மீது ஏற்ப்பட்டக் கவர்ச்சியும், போர்த் தந்திரங்களின் மீதும் ஏற்ப்பட்ட ஈர்ப்பும் காரணங்களாக இருக்கலாம் ;) .

பின் குறிப்பு :
1. பொன்னியின் செல்வனை நான் இந்தாண்டுதான் படித்தேன் ;) .
2. பொன்னியின் செல்வன் ராஜராஜசோழன், அரசனாவதற்கு முற்பட்ட காலகட்டத்தைப் பற்றியது. அதனால் இதில் ராஜராஜசோழனின் போர்த் திறமைகளைப் பற்றியோ அல்லது அவனது நிர்வாகத்திறனைப் பற்றியோ பெரிதாக குறிப்பு் ஒன்றும் இருக்காது. சொல்லப் போனால் ராஜராஜ சோழனுக்கு பெரும் வெற்றிகளை ஈட்டித் தந்தது அவனுடைய தளபதியாக இருந்த அவனுடைய மகன் ராஜேந்திரச்சோழனே. அதனாலயே ராஜராஜசோழனால் நிர்வாகத்திலும், தஞ்சைப் பெரிய கோவில் உள்ளிட்ட கோவில்கள் கட்டுவதிலும் கவனம் கொள்ள முடிந்தது. இந்த விசயத்தில் பொன்னியின் செல்வனை ஹிட்லரின் Mein Kampf உடன் ஒப்பிடலாம். Mein Kampf ஐ ஹிட்லரின் உலகப் போரை மனதில் கொண்டு படித்தால் ஏமாந்துதான் போவோம். ஏனென்றால் Mein Kampf, ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எழுதப்பட்டது.

யவன ராணியும் பொன்னியின் செல்வனும் - 1



சாண்டில்யனின் யவன ராணியும், கல்கியின் பொன்னியின் செல்வனும் அவர்களின் மிகச் சிறந்தப் படைப்புகள். எனக்குத் தெரிந்த அளவில், இன்று வரை பொன்னியின் செல்வன் அளவிற்கு தமிழக மக்களைச் சென்றடைந்த நாவல் வேறு எதுவும் இல்லை. இன்றும் பொன்னியின் செல்வன் புத்தகம் குறிப்பிடத்தக்க அளவிற்கு விற்பனை ஆகிறது. பொன்னியின் செல்வனின் இன்றைய வாசகர்களில் பெரும்பாலனோர் இளைஞ, இளைஞிகளே. அந்த அளவிற்கு பொன்னியின் செல்வன் காலங்கடந்து நிற்கின்றான் (நாவலிலும் வரலாற்றிலும்!).

சாண்டில்யனின் யவன ராணியும் மிகச் சிறந்த நாவலே . இரண்டு நாவல்களும் சரித்திர
நாவல்களாக இருந்த போதிலும், இருவரில் பொதுவாக சாண்டில்யனின் நாவல்களில் கற்பனை வளம் சற்று அதிகமாகவே இருக்கும் (கதையின் ஓட்டத்திலும், கதாபாத்திரங்களின் வர்ணனையிலும்!). கல்கியின் நாவல்கள் பெரும்பாலும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும். .

பொன்னியின் செல்வன் நாவல் நடக்கும் காலம் கி.பி 10 ஆம் நூற்றாண்டு. யவன ராணி நாவல் நடக்கும் காலம் கி.பி 2 ஆம் நூற்றாண்டு (not sure 120 CE or 301 BCE)

யவன ராணியில், கதைக் களமானது கதையின் நாயகன் இளஞ்செழியன், நாயகி யவன ராணி ( பண்டைய காலங்களில் தமிழகத்தில் கிரேக்கர்கள், யவனர்கள் என்றே அழைக்கப்பட்டனர்) மற்றும் வில்லன் டைய்ப்ரீஸைச் சுற்றியே நடைபெரும். இந்நாவல் யவனர்களிடமிருந்து சோழர்கள் ஆட்சியை மீட்பது பற்றியது . இந்நாவலில் யவன ராணி மற்றும் இளஞ்செழியன் இருவருவரின் கதாப்பாத்திரம்மும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் இருக்கும். யவன ராணியிலும் ஒரு முக்கோணக் காதல் கதை உண்டு . இருந்தாலும் கதைக்களமானது காதல், போர் மற்றும் போரைச் சுற்றிய சதிச் செயல்களிலுமே நடைபெறும்.

பொன்னியின் செல்வனிலும் காதல் உண்டு என்ற போதிலும், யவன ராணி அளவிற்கு இருக்காது ;). இதில் கதைக்களமானது, பதவியை பிடிப்பதற்கான சதிச் செயல்களிலும் அதை முறியடிப்பதற்கான செயல்களிலுமே பெரும்பாலும் இருக்கும். இதில் வரும் கதாப்பாத்திரங்கள் முக்காலே மூணு வீசம் உண்மையானவை. பொன்னியின் செல்வன்,குந்தவை,வந்தியத்தேவன்,மதுராந்தகச் சோழன், ஆதித்ய கரிகார்ச் சோழன் (இரண்டாம் கரிகார்ச் சோழன் )பழுவேட்டயர்கள் மற்றும் பலர். இப்படி கதையானது வரலாற்றை அடிப்படையாகவே கொண்டு நடைபெறும்.

இப்படி இரண்டு நாவல்களும் ஒன்றுக்கொன்று சளைக்காதபோதிலும் என்னைப் பெரிதும் கவர்ந்தது நாவலிலும் சரி , கதாப்பாத்திரத்திலும் சரி, யவன ராணியே. அந்தக் கதைப் பாத்திரத்தில் இருக்கும் அழகும் சரி ,மிடுக்கும் சரி, மற்றக் கதாப்பாத்திரங்களை விட அதிகமே. இந்த நாவலில் யவன ராணியின் அறிமுகமே சற்று கவர்ச்சியாகவே இருக்கும் ;). இந்நாவல் நான் படித்த முதல் நாவல். இது நான் என்னுடைய 10 ஆம் வகுப்பு study leave இல் படித்தது.
அதுவும் இந்நாவலின் இரண்டாம் பாகத்தைப் படித்த பிறகே (அதிலும் climax ஐப் படித்த பிறகே இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்தைப் படித்தேன்! ), முதல் பாகத்தைப் படித்தேன்! (நாவலை எடுத்தவன் கீழே வைக்கவில்லை, இரண்டே நாட்களில் படித்து முடித்தேன். அந்த அளவிற்கு என்னைக் கவர்ந்த நாவல்!).

பொன்னியின் செல்வன் சற்று வேறு விதமானது. இது சோழ அரியணைக்கு ஏற்படும் போட்டியைப் பற்றியது( அருள்மொழிவர்மன் பதவிக்கு வருவதில் ஏற்ப்படும் சிக்கல்களை பற்றியது). யவன ராணியுடன் ஒப்பிடும் போது, இதில் கற்பனை வளம் மற்றும் வர்ணனை சற்றுக் குறைவே. ஏனெனில் இந்நாவல் வரலாற்றை ஒட்டி நெருக்கமாகப் பயணித்த ஒன்று. அதனால் heroism உம் குறைவு.

யவன ராணியும்,பொன்னியின் செல்வனும், இரு பெரும் பேரரசர்களின் முறையே முதலாம் கரிகார்ச்சோழன் மற்றும் ராஜராஜ சோழன் (பொன்னியின் செல்வன், இந்நாவலில் அருள்மொழி வர்மன் என்றும், பொன்னியின் செல்வன் என்றும் அழைக்கப்படுவான். இப்பொன்னியின் செல்வனே, ராஜராஜ சோழன்) காலத்தில் நடந்தாலும், கதையின் நாயகர்கள் முறையே இளஞ்செழியனும், வந்தியத்தேவனுமே. இக்கதைகள் நடக்கும் கால கட்டத்தில் முதலாம் கரிகார்ச்சோழனும் மற்றும் ராஜராஜ சோழனும் இளவரசர்களே.

இளஞ்செழியன் முதலாம் கரிகார்ச் சோழனின் தளபதி . வந்தியத்தேவன், பொன்னியின் செல்வனின் தளபதி இல்லை என்ற போதிலும் தளபதி போன்றே செயல்படுவான் என்று கூறலாம். பொன்னியின் செல்வன் நாவலே, ராஜராஜனை சுற்றியே அமைந்தாலும், கதாசிரியர் கல்கியே கதையின் நாயகன் வந்தியத்தேவன் என்றேக் குறிப்பிடுவார். மேலும் கதையும் வந்தியதேவனுடேயேப் பயணிக்கும். பொன்னியில் செல்வனிலாவது, ராஜராஜனின் பங்கு மிகப் பெரிய அளவில் இருக்கும். ஆனால் யவன ராணியில் இளஞ்செழியனும், யவன ராணியுமே பெரும் பகுதியை ஆக்கிரமித்திருப்பார்கள். முதலாம் கரிகார்ச் சோழனின் பங்கு, யவன ராணி நாவலில் பெரிதாக ஒன்றும் இருக்காது. கதாசிரியர் சாண்டில்யன், தன்னுடைய கற்பனை வளத்தைக் காண்பிப்பதற்கு ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் அமைந்தால் நலம் என்று எண்ணி இருக்கலாம் ;) .

Tuesday, October 6, 2009

River dolphin is India's national aquatic animal!

Union Govt has declared that river dolphin is national aquatic animal. This step has been taken to protect the endangered species. River Dolphins are endemic to Ganga. They also found in Brahmaputra (nearly 200), Chilika Lake. Chilika Lake dolphins are called Irravadi dolphins.

River dolphins are in endangered state. They diminish in number because they accidentally caught in fisher men net. Usually fishermen have soft corner for this lovable species.

Amazon river dolphins are famous one but they belongs to least concerned category.

In a survey Dolphins are the most preferred animal in the World. Note that dolphin has beaten even dog,cat !.

Union govt has taken the right decision to save river dolphins from extinction.

Monday, October 5, 2009

Pak - China Nuke deal

When India signed nuke deal with U.S, Pakistan also sought same kind of deal with U.S. But U.S refused to sign any such deal with Pak by indicating Pak's past progress report(A.Q Khan!). So, now Pak tries to sign same kind of deal with China.

But now it seems that, that deal can not get U.S support. Recently an interview to the DAWN news agency Robert Blake, the new US Assistant Secretary of State for South Asian affairs not only rejected that Nuclear deal with Pakistan as the one it (U.S) had signed with India, but also said that Pakistan could not sign a bilateral deal with other countries as well.

He insisted that What it(U.S) had signed(nuclear agreement) with India was not a bilateral deal. bcz it went
through IAEA and NSG. So, it was not a bilateral agreement. It was a multilateral understanding. So even if Pak signs same kind of deal with some other country(here China),that won't be a bilateral agreement. That also needs to get support from IAEA and NSG.

When asked whether U.S will help Pak to produce nuclear energy, he insisted that,that will be an expensive one.

So,at present Pak can not sign any nuclear deal, like the one India had signed with U.S, with any other country.

so here point is, Past progress report is very important!

BRIC

One more topic that i have discussed(or thought or read) about a lot with my friends ;) . But the one that i can not give up to think about is BRIC. But today with new news, now a days BRIC(Brazil,Russia,India and China) country representatives meet frequently and also they decided to meet regularly. That has to be encouraged. On Saturday they discussed about challenges facing World Bank and IMF.

World sees that developing countries can rescue the world from the current financial crisis. Esp it has lot of hope on India and China. So the meetings among BRIC nations is significant one.

I think BRIC won't grow to be like NATO. That is co-operation among military level. And that is not it's goal also. BRIC is for economical purpose. Even though it won't become like NATO, it would be better if BRIC emerges like ASEAN, with their own Financial Corporation and much more treaties among them to help each other in crisis times.

I like to see, strong presence of BRIC in the World. And also this is the right time (world financial crisis time) for them to show their economical strength.

ஆகையால் எழுத்தை நான் நேசிக்கத்தான் செய்கிறேன்!

நான் பல காலமாகவே blog எழுதவேண்டும் என்று எண்ணினேன். சிறிது காலத்திற்கு முன்பு என் நடைமுறை வாழ்க்கையை மாற்ற எண்ணி blog எழுத ஆரம்பித்தேன். சிறிது சிறிதாக blog எழுதுவது எனக்குப் பிடித்துப் போனது, அத்துடன் கூடவே ஒரு தொந்தரவையும் தர ஆரம்பித்தது, அதாவது அது என்னுடைய நேரத்தையும் அதிகமாக சாப்பிட ஆரம்பித்தது. முக்கியமாக எனக்குப் பிடித்த வாசித்தலுக்குரிய நேரத்தின் பெரும் பகுதியையும் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தது. என்னடா இவன் பத்து blog எழுதுரதுக்குள்ளவே இப்படி புழம்புகிறான் என்கிறீர்களா?.

பொதுவாக முதல் தடவை குட்டி போடும் யானையை, in experienced mother (இது அனைத்து உயிரினங்களுக்கும் ் பொதுவான வார்த்தை தான்! ) என்பார்கள். அது தன்னுடைய குட்டியை சிறுது நேரம் கூட படுக்க(ஒய்வு எடுக்க) விடாது. அது இறந்து விட்டதோ என்ற பயத்தின் காரணமாக எப்பொழுதும் எழுப்பிக் கொண்டே இருக்கும்.

அது போல, இந்த blog என் நேரத்தைச் சாப்பிடுகிறது என்ற என்னுடைய பயம் , ஒரு வேளை நான் ஒரு in experienced blogger ஆக இருப்பதன் காரணமாகக் கூட இருக்கலாம். ஆனால் இந்தப் புழம்பல் நிச்சயமாக அனுபவமின்மை in experienced காரணமாக மட்டுமே அல்ல. மேலும் இது என் நேரத்தை சாப்பிடுகிறது என்ற பயம் கூட அல்ல, எனக்கு அதையும் தாண்டி ஒரு விஷயம் இருப்பதாகவேத் தோன்றுகிறது. நான் எழுத ஆரம்பித்த பிறகு, என்னுடைய வாசிப்பிற்கான நேரம் குறைந்து விட்டது. அதாவது என்னுடைய எழுத்து என்னுடைய வாசிப்பை தின்று விடுகிறது. அதாவது என்னுடைய எழுத்து, வாசிப்பதின் மூலம் நான் கற்கும் புதுப்புது விசயங்களைத் தடுக்கிறது. இதை நான் நிச்சயமாக என் எழுத்தின் மீது குறை சொல்லக் கூடாது. அது என்னுடைய நேர நிர்வாகத்தின் மீது உள்ள குறைபாடே . மேலும் நான் எழுதும் பதிப்புகளில் 90% க்கு மேலும் , எனக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த விசயங்களாகவோ அல்லது ஏற்கனவே நான் அவற்றைப் பற்றிப் பலருடன் பல முறை விவாதித்த விசயங்களாகவோதான் இருக்கின்றன. அவற்றை எழுதுவதன் மூலம் நான் புதிதாக எதுவும் கற்பதில்லை. அவற்றை எழுதுதல் என்பது எனக்குத் தெரிந்ததை கக்குவதைப (இதற்க்கு பதமான வார்த்தை எனக்கு தெரியவில்லை, ஆகையால் என்னை மன்னிக்கவும் ;) ) போலவே உணர்கிறேன் .

வாசித்தல் என்பது எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம். எழுதுதல் என்பதை விட மிகவும் பிடித்த விஷயம் என்றும் கூறலாம். நான் எழுதுவதற்க்காக புதிதாக எதையும் வாசிப்பதில்லை அல்லது கற்பதில்லை. கற்றதையே எழுதுகிறேன். அதுவே எனக்கு ஒரு bore ஆன விசயமாக உள்ளது. மேலும் இதற்கு என்னுடைய typing வேகமும், வார்த்தைகளை கோர்வையாக அமைப்பதில் எனக்கு உள்ளக் குறைபாடும் சில (முக்கியக்) காரணங்கள். என்னுடைய எழுத்துக்களில் நீங்கள் சிறிது எழுத்துப்பிழைகளையும் காணலாம். முக்கியமாக சந்திப் பிழைகள். அவை என்னுடைய கவனமின்மை காரணமாகவும், Google transliterator ஐ பயன்படுத்துவதில் எனக்கு உள்ள அனுபவமின்மை காரணமாகவும் அமைகின்றன . என்னுடைய எழுத்தில் இருக்கும் மிக மிக முக்கிய குறைபாடு வாக்கிய அமைப்பு மற்றும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல் . இவ்விரண்டிலும்் நான் மிகவும் தேர்ச்சிக் குறைந்தவன். அந்தக் குறைபாடு எனக்கு மிகச் சலிப்பைத் தருகிறது.

இவ்வளவு குறைபாடுகளையும் தாண்டி எழுதுதல் என்பது எனக்கு பிடித்ததாகவே உள்ளது ;). அதற்கு ஒரு முக்கியக் காரணம் எழுத்தில் இருக்கும் ஒரு ஈர்ப்பு. எழுத்தில் இருக்கும் ஈர்ப்பானது மிகவும் ஆச்சரியப்படத்தக்கது. எழுத்தும், பேச்சும் எல்லாரையும் தன் பால் ஈர்க்கும் வல்லமை வாய்ந்தவைகள். நான் என்னை ஒரு வாசிப்பாளன் என்றுக் காட்டிக் கொள்வதன் மூலம், எழுத்தில் இருக்கும் ஈர்ப்பை என்னால் மிக நன்றாக உணர முடிகிறது. மிக நல்ல ஒரு கட்டுரையோ அல்லது மிக நல்ல நாவலையோ படித்து முடித்த பிறகு ஏற்படும் பரவச உணர்வு மிக அற்புதமானது. மிக நல்லக் கட்டுரை அல்லது நாவல் என்பது அது கூற வரும் விஷயங்களை பற்றியது மட்டுமே அல்ல. அந்தக் கட்டுரை அல்லது நாவலில் இருக்கும் கரு, அக்கருவை அது எடுத்துரைக்கும் முறை, அதில் உள்ள வாக்கிய அமைப்புகள், சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல், இப்படி பல விசயங்கள் சேர்ந்து அவற்றை சிறந்தவைகளாக ஆக்குகின்றன. என்னுடைய எழுத்துக்களும் அவ்வாறாகவே இருக்க விரும்புகிறேன். அதை முயற்சியின் மூலமும், பயிற்ச்சியின் மூலமும் மட்டுமே கொண்டுவர முடியும்.

எழுத ஆரம்பித்த பிறகு நான் என்னை ஒரு புது மனிதனாக உணர்கிறேன் . எழுத்தானது எனக்கு ஒரு புது அடையாளத்தைக் கொடுத்துள்ளது. பொதுவாக எப்பொழுதும் நான் விசயங்களைத் தெரிவிப்பதைப் பற்றி் மட்டுமே கவலைப்பட்டேனேயொழிய ,அவற்றைக் கூறும் முறையைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை். (அதனால் தான் என்னவோ தேர்வில் தமிழில் மற்றப் பாடங்களை விடக் குறைந்த மதிப்பெண்ணைப் பெற்றேன் ;) ). அதே போல் தான் வாசிக்கும் பொழுதும் விசயங்களிலேயே என்னுடைய கவனம் சென்றது. அதில் அமைந்த வாக்கிய அமைப்புகளையோ அல்லது வார்த்தைத் தேர்ந்த்தெடுத்தல்களிலோ கவனம் கொண்டதில்லை. ஆனால் இப்பொழுது வாசிக்கும்பொழுது அவற்றிலும் கவனம் கொள்கிறேன்.

பொதுவாக நான் என்னைச் சுற்றி நடக்கும் விசயங்களிலும் இதுவரை பெரிதாக கவனம் கொண்டதில்லை. ஆனால் இப்பொழுது கவனம் கொள்கிறேன் (blog எழுத உதவும் அல்லவா! ).

இப்படி என்னுள் பல மாற்றங்களை ஏற்ப்படுத்திய எழுத்தை நான் நேசிக்கத்தான் செய்கிறேன் ! :).

Sunday, October 4, 2009

கமல்


கமல் ஒரு பொக்கிஷம். பொக்கிஷம் என்ற வார்த்தை சற்று அதிகப்படியானதாகவே இருக்கலாம். இருந்தாலும் எனக்குச் சரி என்றே படுகிறது. கமல் நடிப்பை பார்க்கும் போது மிக நல்ல ஒரு உணர்வு (எனக்கு ஒரு பெருமித உணர்வேத்) தோன்றும். ஏதோ நாமே அக்கதை நடக்கும் களத்தில் இருப்பது போல் தோன்றும்.

கமல் பேட்டியைக் காண்பது என்பது அதை விட மிகச் சிறப்பாக இருக்கும். கமலின் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் தோன்றும். பொதுவாக கமல் பேட்டியின் போது கமல் சொல்வதே சரி என்றும், ஏன் ,கமல் சொல்வது மட்டுமே சரி என்றும் தோன்றும். இப்படி மற்றவரை எதையும் யோசிக்க வைக்க விடாமல், தான் சொல்வதை ஏற்க வைப்பது என்பது ஒரு மிகச் சிறந்த கலை. அந்தக் கலை மிகச் சிலருக்கே வாய்க்கும். எனக்குத் தெரிந்து நான் அந்தக் கலையை கமலிடம் மட்டுமே கண்டுள்ளேன். அக்கலை கமலுக்கு மிகவும் நன்றாக வாய்த்துள்ளது. இப்பாராட்டு ஏதோ வஞ்சப் புகழ்ச்சி அல்ல, நான் கமலின் ஒரு ரசிகன் என்பதில் எனக்கு இருக்கும் கர்வத்திலும், உரிமையிலுமே கூறியது.

பொதுவாக நான் யாருடைய ரசிகன் என்று, என்னை அடையாளப் படித்திக்கொள்ளமாட்டேன். ஏனென்றால், பின் அவர்களுடைய ஒவ்வொரு செயலுக்கும், சொல்லப் போனால் அவர்களுடைய ஒவ்வொரு தவறான படைப்புக்கும் ரசிகன் என்ற முறையில் நான் என்னுடைய ஆதரவையோ அல்லது குறைந்தபட்சம் சப்பைக் கட்டோ கட்ட வேண்டும் என்ற பயம் கூட ஒரு காரணமாக இருக்கலாம் ;). ஏனெனில் இச்சமுதாயம், ஒரு ரசிகன் என்பவனிடமிருந்து அதையும் எதிர்பார்க்கிறது. பொதுவாக எனக்கு அவருடைய comercial படங்கள் என்று சொல்லப்படும் படங்களில் ஈடுபாடு கிடையாது. எ.கா: காதலா காதலா. அவருடைய எதார்த்தப் படங்களிலே ஈர்ப்பு உண்டு. எ.கா: UPO. என்னைப் பொறுத்தவரையில் ஒரு ரசிகனானவன்,ஒரு கலைஞனைக் கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இவ்வளவையும் தாண்டி நான் ரசிகன் என்று கூறிக்கொள்வது என்றால் அது மிகச் சிலருக்கே. அதில் கமலுக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.

நேற்று (02 Oct 2009) கமல் பேட்டியைக் காணும் வாய்ப்பு வாய்த்தது(கலைஞர் தொலைக்காட்சியில் UPO பேட்டி). அதுவும் கடைசி சில நிமிடங்களே காணக் கிடைத்தது. கமல் பேட்டியைத் தவற விட்டு விட்டோமே என்ற உணர்வு அப்பேட்டி முடியும் வரை, ஏன் அதைத் தாண்டியும் இருந்தது (எவரேனும் அந்தப் பேட்டியின் youtube அல்லது வேறு ஏதேனும் tube இன் link யோ அனுப்பினால், உங்களுக்கு கமலின் அடுத்தப் படத்தின் முதல் காட்சியில் ticket கிடைக்க ஆண்டவனைப் பிராத்திக்கிறேன் ;) ). கமலின் ஒவ்வொரு படங்களின் வெற்றி தோல்விகளும் அவருடைய, பேட்டியில் பிரதிபலிக்கும். சண்டியர் திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று எழுந்த பிரச்சினைகளின் போது அவர் கொடுத்த பேட்டியில் தெறித்த அவருடைய கோபம், UPO பட வெற்றியின் போது கொடுத்த அவருடைய பேட்டிகளில் தெரிந்த பெருமித உணர்வு, இப்படி அவருடைய படங்களின் ்வெற்றி தோல்வி அவருடைய பேட்டியில் தெரியும் .

கமல் பேட்டியில் இருக்கும் மிக முக்கிய மற்றொரு அம்சம், கமலின் தமிழ். தமிழ் உச்சரிப்பு,வார்த்தைத் தேர்ந்தெடுப்பு,தான் சொல்ல வருவதை மற்றவரை ஏற்க வைக்கும் பாங்கு. அதுவே என்னைக் கமலின் பேட்டியை காணத் தூண்டும் மிக முக்கிய அம்சம்.

கமல் தமிழ் திரையுலகத்திற்கு பல நிலைகளில் முன்னோடியாக இருந்திருக்கிறார். ஏன் அவருடைய பல திரைப்படங்கள் ,தமிழ் திரையுலகம் mature ஆவதற்கு வெகு முன்பே எடுக்கப்பட்டவை. எ.கா: விக்ரம்,குணா,அன்பே சிவம். குணாத் திரைப்படம், காதல் கொண்டேன் திரைப்படம் வந்த காலத்தில் வந்திருந்திருந்தால் நிச்சயம் 100 நாட்களைக் கண்டிருக்கும்.

சில நேரங்களில் தோன்றும், நடிப்பு என்ற ஒரு தொழிலே இல்லாமல் இருந்திருந்தாலோ அல்லது இத்தொழிலுக்கு கமல் வராமல் இருந்திருந்தாலோ, கமல் என்னவாக ஆகிருப்பார்?. எனக்குத் தோன்றிய வரையில் கமலுக்கு பைத்தியம் பிடித்திருக்கும். எல்லோரும் கூறுவது போல் கமல் ஒரு பிறவிக் கலைஞன். கமலால் நடிக்காமல் இருக்கவே முடியாது. இன்னும் இருபது வருடம் கழித்துக் கூட கமல் கதாநாயகனாகவே நடிப்பார். என்ன அப்பொழுது மரத்தைச் சுற்றி டூயட் பாடும் கதாநாயகனாக அல்லாமல் UPO போன்ற கதாப்பாத்திரங்களில் நடிப்பார். ஏனென்றால் கமலுக்குத் தான் யார் என்றும், தனக்கு என்ன வேண்டும் என்றும் அதை விட முக்கியமாகத் தன்னுடைய களம் என்னவென்றும் மிக நன்றாகத் தெரியும்.

இம்மாபெரும் கலைஞனின் உழைப்பு இத்திரையுலகின் எக்காலத்திலும் ஏதேனும் ஒரு மூலையில், ஒரு சிறு அளவாவது இருக்கும். இம்மாபெரும் கலைஞனின் ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் என்றுமே எனக்கு ஒரு பெருமித உணர்வும் அதையும் தாண்டிய ஒரு கர்வமும் உண்டு. கமல் மேலும் UPO போன்ற பல எதார்த்தப் படங்கள் செய்யவும், அதற்க்கு மக்களின் ஆதரவு கிடைக்கவும் என்னுடைய வாழ்த்துக்கள்.