Wednesday, October 7, 2009

யவன ராணியும் பொன்னியின் செல்வனும் - 1



சாண்டில்யனின் யவன ராணியும், கல்கியின் பொன்னியின் செல்வனும் அவர்களின் மிகச் சிறந்தப் படைப்புகள். எனக்குத் தெரிந்த அளவில், இன்று வரை பொன்னியின் செல்வன் அளவிற்கு தமிழக மக்களைச் சென்றடைந்த நாவல் வேறு எதுவும் இல்லை. இன்றும் பொன்னியின் செல்வன் புத்தகம் குறிப்பிடத்தக்க அளவிற்கு விற்பனை ஆகிறது. பொன்னியின் செல்வனின் இன்றைய வாசகர்களில் பெரும்பாலனோர் இளைஞ, இளைஞிகளே. அந்த அளவிற்கு பொன்னியின் செல்வன் காலங்கடந்து நிற்கின்றான் (நாவலிலும் வரலாற்றிலும்!).

சாண்டில்யனின் யவன ராணியும் மிகச் சிறந்த நாவலே . இரண்டு நாவல்களும் சரித்திர
நாவல்களாக இருந்த போதிலும், இருவரில் பொதுவாக சாண்டில்யனின் நாவல்களில் கற்பனை வளம் சற்று அதிகமாகவே இருக்கும் (கதையின் ஓட்டத்திலும், கதாபாத்திரங்களின் வர்ணனையிலும்!). கல்கியின் நாவல்கள் பெரும்பாலும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும். .

பொன்னியின் செல்வன் நாவல் நடக்கும் காலம் கி.பி 10 ஆம் நூற்றாண்டு. யவன ராணி நாவல் நடக்கும் காலம் கி.பி 2 ஆம் நூற்றாண்டு (not sure 120 CE or 301 BCE)

யவன ராணியில், கதைக் களமானது கதையின் நாயகன் இளஞ்செழியன், நாயகி யவன ராணி ( பண்டைய காலங்களில் தமிழகத்தில் கிரேக்கர்கள், யவனர்கள் என்றே அழைக்கப்பட்டனர்) மற்றும் வில்லன் டைய்ப்ரீஸைச் சுற்றியே நடைபெரும். இந்நாவல் யவனர்களிடமிருந்து சோழர்கள் ஆட்சியை மீட்பது பற்றியது . இந்நாவலில் யவன ராணி மற்றும் இளஞ்செழியன் இருவருவரின் கதாப்பாத்திரம்மும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் இருக்கும். யவன ராணியிலும் ஒரு முக்கோணக் காதல் கதை உண்டு . இருந்தாலும் கதைக்களமானது காதல், போர் மற்றும் போரைச் சுற்றிய சதிச் செயல்களிலுமே நடைபெறும்.

பொன்னியின் செல்வனிலும் காதல் உண்டு என்ற போதிலும், யவன ராணி அளவிற்கு இருக்காது ;). இதில் கதைக்களமானது, பதவியை பிடிப்பதற்கான சதிச் செயல்களிலும் அதை முறியடிப்பதற்கான செயல்களிலுமே பெரும்பாலும் இருக்கும். இதில் வரும் கதாப்பாத்திரங்கள் முக்காலே மூணு வீசம் உண்மையானவை. பொன்னியின் செல்வன்,குந்தவை,வந்தியத்தேவன்,மதுராந்தகச் சோழன், ஆதித்ய கரிகார்ச் சோழன் (இரண்டாம் கரிகார்ச் சோழன் )பழுவேட்டயர்கள் மற்றும் பலர். இப்படி கதையானது வரலாற்றை அடிப்படையாகவே கொண்டு நடைபெறும்.

இப்படி இரண்டு நாவல்களும் ஒன்றுக்கொன்று சளைக்காதபோதிலும் என்னைப் பெரிதும் கவர்ந்தது நாவலிலும் சரி , கதாப்பாத்திரத்திலும் சரி, யவன ராணியே. அந்தக் கதைப் பாத்திரத்தில் இருக்கும் அழகும் சரி ,மிடுக்கும் சரி, மற்றக் கதாப்பாத்திரங்களை விட அதிகமே. இந்த நாவலில் யவன ராணியின் அறிமுகமே சற்று கவர்ச்சியாகவே இருக்கும் ;). இந்நாவல் நான் படித்த முதல் நாவல். இது நான் என்னுடைய 10 ஆம் வகுப்பு study leave இல் படித்தது.
அதுவும் இந்நாவலின் இரண்டாம் பாகத்தைப் படித்த பிறகே (அதிலும் climax ஐப் படித்த பிறகே இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்தைப் படித்தேன்! ), முதல் பாகத்தைப் படித்தேன்! (நாவலை எடுத்தவன் கீழே வைக்கவில்லை, இரண்டே நாட்களில் படித்து முடித்தேன். அந்த அளவிற்கு என்னைக் கவர்ந்த நாவல்!).

பொன்னியின் செல்வன் சற்று வேறு விதமானது. இது சோழ அரியணைக்கு ஏற்படும் போட்டியைப் பற்றியது( அருள்மொழிவர்மன் பதவிக்கு வருவதில் ஏற்ப்படும் சிக்கல்களை பற்றியது). யவன ராணியுடன் ஒப்பிடும் போது, இதில் கற்பனை வளம் மற்றும் வர்ணனை சற்றுக் குறைவே. ஏனெனில் இந்நாவல் வரலாற்றை ஒட்டி நெருக்கமாகப் பயணித்த ஒன்று. அதனால் heroism உம் குறைவு.

யவன ராணியும்,பொன்னியின் செல்வனும், இரு பெரும் பேரரசர்களின் முறையே முதலாம் கரிகார்ச்சோழன் மற்றும் ராஜராஜ சோழன் (பொன்னியின் செல்வன், இந்நாவலில் அருள்மொழி வர்மன் என்றும், பொன்னியின் செல்வன் என்றும் அழைக்கப்படுவான். இப்பொன்னியின் செல்வனே, ராஜராஜ சோழன்) காலத்தில் நடந்தாலும், கதையின் நாயகர்கள் முறையே இளஞ்செழியனும், வந்தியத்தேவனுமே. இக்கதைகள் நடக்கும் கால கட்டத்தில் முதலாம் கரிகார்ச்சோழனும் மற்றும் ராஜராஜ சோழனும் இளவரசர்களே.

இளஞ்செழியன் முதலாம் கரிகார்ச் சோழனின் தளபதி . வந்தியத்தேவன், பொன்னியின் செல்வனின் தளபதி இல்லை என்ற போதிலும் தளபதி போன்றே செயல்படுவான் என்று கூறலாம். பொன்னியின் செல்வன் நாவலே, ராஜராஜனை சுற்றியே அமைந்தாலும், கதாசிரியர் கல்கியே கதையின் நாயகன் வந்தியத்தேவன் என்றேக் குறிப்பிடுவார். மேலும் கதையும் வந்தியதேவனுடேயேப் பயணிக்கும். பொன்னியில் செல்வனிலாவது, ராஜராஜனின் பங்கு மிகப் பெரிய அளவில் இருக்கும். ஆனால் யவன ராணியில் இளஞ்செழியனும், யவன ராணியுமே பெரும் பகுதியை ஆக்கிரமித்திருப்பார்கள். முதலாம் கரிகார்ச் சோழனின் பங்கு, யவன ராணி நாவலில் பெரிதாக ஒன்றும் இருக்காது. கதாசிரியர் சாண்டில்யன், தன்னுடைய கற்பனை வளத்தைக் காண்பிப்பதற்கு ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் அமைந்தால் நலம் என்று எண்ணி இருக்கலாம் ;) .

3 comments:

JDK said...

machi unakulley oru Sujatha, S.Ra irukkaanga... :) Continue pannu.

JDK said...

Please,send me the Yavana Raani's pdf if possible. ?

எல் கே said...

@JDK

u wont get sandilyans novel in net. its not nationlised.