Wednesday, October 28, 2009

சோமாலியப் பெண்களை துரத்தும் பசிகொடுமை,கற்பழிப்புகள் மற்றும் கழுதைப்புலிகள்

சோமாலியா - ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் காண்டாமிருகத்தின் கொம்பு போல் இருக்கும் ஒரு நாடு. தென்னிந்தியாவின் பரப்பளவுள்ள இந்நாடு 1960 ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்தும், இத்தாலியிடமிருந்தும் சுதந்திரம் பெற்றது. 1991 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு என்ற ஒன்று இல்லாமலே இருந்து வருகிறது. 2008 ஆம் ஆண்டின் பின் பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் நாட்டின் தலைநகரம் உட்பட தென் பகுதி முழுவதையும் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்த தீவிரவாதிகளின் ஆதரவுடனையே தற்பொழுது இந்தியப் பெருங்கடலில் கடற்கொள்ளைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சோமாலியாவிற்க்கென்று ஒரு ராணுவம் கிடையாது.

நெடுங்காலமாகவே இந்நாடு பசிக் கொடுமையால் அவதிப்பட்டுக் கொண்டுவருகிறது. இதற்க்கு மிக முக்கியக் காரணம் அங்கு நடைபெற்றுக் கொண்டுவரும் இனக்கலவரங்களே. ஒரு மத்திய அரசும், ராணுவமும் இல்லாத காரணத்தாலும் பசிக் கொடுமையாலும் அங்கு குற்றங்கள் மிக அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டுவருகின்றன.

அங்குள்ள பெண்கள் பசிக் கொடுமையால் தங்கள் கணவர்களால் கைவிடப்படுகிறார்கள். சில ஆண்கள் வேலை தேடி பக்கத்து நாடான ஏமனுக்கு கள்ளத்தனமாக செல்கிறார்கள். அப்படிச் சென்றவர்களின் கதி என்னவென்று கூட அவர்களின் மனைவிகளுக்குத் தெரிவதில்லை. இத்தகையப் பெண்களை பசி கொடுமை துரத்துவதோடு அல்லாமல் கற்பழிப்புகளும் தொடர்கின்றன. சில பெண்கள் கால்நடைகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வருகிறார்கள். அந்தக் கால்நடைகள் கூட கழுதைப்புலிகளால் தூக்கிக் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறாக அங்குள்ள பெண்களின் வாழ்க்கை பசி கொடுமையாலும், கற்பழிப்புகளாலும், கழுதைப்புலிகளாலும் கிழிக்கப்படுகின்றது .

மேலும் அறிய இங்கே சொடுக்கவும் .

No comments: