Friday, April 30, 2010

உதிரிப் பூக்கள் - 2

Time பத்திரிக்கையின் வருடாந்திர உலகிலேயே அதிகமாக ஆதிக்கம் செலுத்தக்கூடிய 100 நபர்களில் 9 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவற்றில் batting legend சச்சின் டெண்டுல்கரும், பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கும் இடம் பெற்றுள்ளனர். kudos indians ...
***************
இந்தியா பாகிஸ்தானிற்கு இடையேயான அமைதி ஒப்பந்தம் ஆடுகளுக்கு கூட பயன்படுகிறது. காஷ்மீரில் உலகிலேயே பெரிய ஆட்டு இனமான markhor உள்ளது. மிக அரிய இனமான இந்த ஆடுகளின் எண்ணிக்கை இந்தியா பாகிஸ்தானிற்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு அதிகரித்துள்ளது. தற்போது இந்த ஆடுகளின் எண்ணிக்கை Qazinag park கில் 300 ஆக உள்ளது. 2005 இல் இவற்றின் எண்ணிக்கை வெறுமனே 115 ஆக மட்டுமே இருந்தது. இந்தியா பாகிஸ்தானிற்கு இடையே அமைதி ஏற்பட்டால் அது பல வகையிலும் பயன் தரக்கூடியது.
***********************
உலக வங்கியில் இந்தியாவிற்கான voting power அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவிற்கான voting power 2.91% ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் வளரும் நாடுகளின் மொத்த voting power 47% மாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியா, உலக வங்கியில் 7 வது மிகப் பெரிய பங்குதாரராக உள்ளது . சீனா 4.42% வீதத்துடன் 3 வது மிகப் பெரிய பங்குதாரராக உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் குரல் உலக வங்கியில் ஓங்கி ஒலிபதற்க்கான வாய்ப்பு எழுந்துள்ளது.
********************
இன்று வடபழனி 12B பேருந்தில் முதல் தடவையாக ஒரு பெண் நடத்துனரைப் பார்த்தேன். ஏற்கனவே MTC பேருந்தில் பெண் நடத்துனரும், பெண் ஓட்டுனரும் உள்ளனர் என்று கேள்விப்பட்டிருந்தாலும் இப்பொழுதுதான் முதல் தடவையாகப் பார்கிறேன். மிக நன்று.
*******************
அமெரிக்கா, பாகிஸ்தானிற்கு $600 million வழங்க உள்ளது. பாகிஸ்தான் அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்று வருவது அனைவரும் அறிந்ததே. இதற்க்கு அமெரிக்கா பல வகையிலும் பாகிஸ்தானிற்கு உதவி வருகிறது. அந்த வகையில்தான் இந்த $600 million வழங்க உள்ளது. இது அமெரிக்கா பாகிஸ்தானிற்கு வழங்க ஒப்புக்கொண்ட $2 billion ஒரு பகுதியாகும். எனக்கு இந்த நேரத்தில் இந்தியா, அமெரிக்காவிடம் பாகிஸ்தானைப் பற்றி தெரிவித்த கவலை தான் ஞாபகம் வருகிறது. பாகிஸ்தான், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்பதற்காகபெறும் நிதியை இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தக்கூடும் என்ற கவலைதான் அது.
********************
ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்கு பெயர் பெற்ற காசிரங்கா தேசிய புலிகள் காப்பகம், உலகிலேயே புலிகள் நெருக்கமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சராசரியாக 100 ச.கிமீ க்கு 32.64 புலிகள் உள்ளன. இதற்க்கு முன் இத்தகுதியை பெற்றிருந்தது கார்பெட் தேசிய புலிகள் காப்பகம். அங்கு 100 ச.கிமீ க்கு சராசரியாக 19.6 புலிகள் உள்ளன. இது video trap கணக்கெடுப்பு மூலம் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. video trap கணக்கெடுப்பு புலிகளின் வரிகளைக் கொண்டு கணக்கெடுக்கப்படுகிறது. இது தான் உலகிலேயே மிக நம்பகமான கணக்கெடுப்பு முறையாகும்.
********************
இலங்கையில் உள்ள அனுராதபுரத்தில் உள்ள போதி மரத்தின், இளைய கன்று ஒன்று இந்தியாவிற்கு அளிக்கப்படுகிறது. கௌதம புத்தர், புத்த கயாவில் உள்ள போதி மரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் பெற்றார் என்பது அனைவரும் அறிந்த செய்தியே. அந்த மரத்திலிருந்து பெற்ற இளைய கன்று ஒன்று அனுராதபுரத்தில் நடப்பட்டது. நாளடைவில் புத்த கயாவில் இருந்த போதி மரம் பட்டுவிட்டது. பிறகு அனுராதபுரத்தில் இருந்த போதி மரத்திலிருந்து இளைய கன்று ஒன்று பெறப்பட்டு புத்த கயாவில் நடப்பட்டது. அனுராதபுரத்தில் உள்ள இந்த போதி மரம் தான் உலகிலயே வயதான மரம். மீண்டும் இதிலிருந்து பெறப்படும் இளைய மரமானது பாட்னாவில் நடப்பட இருக்கிறது.
********************

No comments: