Monday, October 4, 2010

எந்திரன் - திரை விமர்சனம்


இந்த சனிக்கிழமை நான், மது, கார்த்திக் மூணு பேரும் எந்திரன் படம் பாக்க கோயம்பேடு ரோஹிணி தியேட்டர் போயிருந்தோம். நல்ல கூட்டம். கொஞ்ச காலத்துக்கு முன்னாடிலாம் ரஜினி, கமல் படங்களை ரெண்டாவது நாள் மூணாவது நாள் பாக்குரதுலாம் ரொம்ப கஷ்டம். முதல் ஒரு வாரத்துக்கு ரசிகர் மன்ற ஆளுங்களுக்குதான் டிக்கெட் கொடுப்பாங்க. ஆனா இந்த தடவ ரஜினியோட மிகப் பெரிய படம், மிக அதிக எதிர்பார்ப்ப ஏற்படுத்தின படமான எந்திரன் படத்துக்கு முதல் நாள் முதல் ஷோவ்க்கே ரசிகர் மன்றம் அல்லாதவங்களுக்கே டிக்கெட் ஈசியா கிடைச்சது. அதுக்கு முக்கிய காரணம் படம் இந்தியாவிலயே அதிக அளவாக 2000 திற்கும் மேற்ப்பட்ட அளவு பிரிண்ட் போடப்பட்டது முக்கிய காரணம். தமிழ்நாட்டுல மட்டும் 550 தியேட்டர்ல ரிலீஸ் ஆகியிருக்கு. சென்னையில மட்டும் 40 தியேட்டர்ல ரிலீஸ் ஆகியிருக்கு.

படத்தோட லாபம் பத்தி பேசிகிட்டு இருந்தப்ப ஞாநி சொன்னது ஞாபகம் வந்தது. படத்தோட பட்ஜெட் 150 கோடி ரூபாய். படத்துல லாபம் பாக்கனும்னா படம் 300 கூடி ரூப்பாயனாவது ஈட்டனும். அதுக்கு தமிழ்நாட்டுல 5 கோடி மக்கள் டிக்கெட் விலை 60 ரூபாய் மேனிக்கு பாக்கணும் . அப்படினாதான் 300 கோடி ஈட்ட முடியும். இது எப்படி சாத்தியம்னு நான் நினைச்சேன். அப்பத்தான் மது இன்னொரு கணக்கு சொன்னான். படம் 2000 பிரிண்ட் போட்டுருக்காங்க. ஒரு தியேட்டர்ல 300 சீட் இருக்குனு வச்சுக்குவோம். ஒரு டிக்கெட்டோட விலை சராசரியா 100 ரூபாய் (நாங்க பாத்தப்ப டிக்கெட் விலை 200 ரூபாய். வெளிநாட்டுளலாம் இந்திய ரூபாய் மதிப்பின்படி 3000 ரூப்பாயலாம் வித்துருக்கு). ஒரு நாளைக்கு 4 ஷோ. so 300*4*100*2000 = 24,00,00,000. அதாவது ஒரு நாளைக்கு கலெக்சன் மட்டும் 24 கோடி ரூபாய். இப்படியே ரெண்டு வாரத்துக்கு ஓடும்னு வச்சுக்குவோம். அப்படினா 24 கோடி * 14 = 336 கோடி ரூபாய். ஆக ரெண்டு வார கலேச்சனுலயே 336 கோடி ரூபாய் பாத்துரலாம். படம் 100 நாள் ஒடுச்சுனா மத்த லாபம் தனி . அப்படினா சன் குழுமம் அடையப்போற லாபத்தை பாருங்க.

இப்படி பேசிக்கிட்டு இருந்தப்ப மணி 6.10 ஆச்சு. நல்ல கூட்டம் வேற. ரோஹிணி தியேட்டர் கேட்ட திறந்தாங்க. அப்படி இப்படின்னு செட்டில் ஆகும்போது மணி 6.15 . பாத்தா படத்த உடனே ஆரம்பிச்சுட்டான். ஷோ 6.30 தான் timing. படம் ஆரம்பிச்ச உடனே ரஜினிய காமிச்சுறாங்க. எந்த ஒரு opening song ஒ, இல்ல punch dialog ஒ கிடையாது. இந்த படத்துல்ல ரஜினி வசீகரனு ஒரு விஞ்ஞானியா நடிச்சிருக்காரு அவரோட girl friend ஆ ஐஸ்வர்யா ராய். படத்துல்ல ரோபோவ வச்சு நெறைய கதை இருக்கதாலா படத்துல ரஜினி ரோபோவ தயாரிக்கிரதுல வெற்றி அடையிரதுல இருந்து ஆரம்பம் ஆகிறது. படத்துல ரஜினியோட குருநாதர் ஒருத்தர் இருக்காரு. அவரும் ரோபோ தயாரிக்கிறாரு. ஆனா அதுல அவரால வெற்றி அடைய முடியல. அவர் இந்த ரோபோவ தீவிரவாதிகளுக்காகத் தயாரிக்கிறாரு. அதுல அவரால வெற்றி அடைய முடியலனா தீவிரவாதிகள் அவர கொன்றுவிடுவதா மிரட்டுறாங்க. அதனால அவருக்கு நிர்பந்தம். இதனால அவரு ரஜினிட்ட பேசிப் பார்க்கிறாரு, ரஜினியோட ரோபோவ தன்கிட்ட தந்திரும்படி. ஆனா ரஜினி தான் இந்த ரோபோவ இந்திய ராணுவத்திற்காக தயாரிச்சிருக்கிறதாகவும் அதனால் தர முடியாதுங்கரதாவும் சொல்றார். இந்த நேரத்துல ராணுவ approval லுக்கு அனுப்ப இந்த குருநாதரின் ஒப்புதல் வேணும். ஆனால் அந்த குருநாதர் ரஜினியோட ரோபோவுக்கு மனிதர்களின் உணர்ச்சிகளைப் பற்றி ஒன்றும் தெரியாததால அதுக்கு ஒப்புதல் வழங்க முடியாதுன்னு சொல்லிடுறார். பின்னர் ரஜினி தன் ரோபோவுக்கு மனிதர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள பயிற்சி அளிக்கிறார். அந்த உணர்ச்சிகளில் காதலும் ஒன்று. அதனால் என்ன விபரீதம் ஏற்படுகிறதுங்குரதுதான் கதையே.

முதல் பாதி ரொம்ப விறு விறுன்னு செல்லுது. Thanks to Citi robot. சிட்டி ரோபோனால முதல் பாதி விறு விறுனும் , காமெடி ஆகவும் செல்லுது . அது செய்யுற வேலயலாம் பாத்தா நமக்கே இப்படி ஒரு ரோபோட் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு தோணுது. ஆனா அந்த வில்லன் குருநாதர், சிட்டி ரோபோட்ட நீ உலகிலேயே மிகச் சிறந்த ரோபோ உன்னைய போய் சமையல் பண்ணவும், துணி துவைக்கவும், சூ போடவும் use பண்றாங்கனு சொல்லும்போதுதான் நமக்கே ஆமாம்ல , எவ்வளவு மிகச் சிறந்த ரோபோ அதைப் போய் இப்படி use பண்ராங்களேனு தோணுது. ஆனா அடிமட்ட ரசிகர்களையும் கவர இதுதான் சிறந்த வழி.

இந்தப் படத்துல ரஜினி தன்னுடைய image யே கலட்டி வச்சுட்டு நடிக்கிறார். எந்த ஒரு opening song உம் கிடையாது, opening fight கிடையாது, பஞ்ச் டயலாக் கிடையாது. எல்லாத்துக்கும் மேல சிட்டி ரோபோ இல்லாதப்ப கலாபவன் மணிகிட்ட இருந்து தப்பிக்க மண்ண கண்ணுல தூவிட்டு ஓடறதுன்னு ரஜினி எந்த ஒரு image பத்தி கவலைப்படாம நடிச்சிருக்கார்.

என்னதான் சிட்டி version 1.0 நல்லா பண்ணி இருந்தாலும் ரசிகர்களை கவர்வது என்னவோ இரண்டாம் பாதி சிட்டி version 2.0 தான். பொதுவா ரஜினி anti hero வா நடிச்ச படங்களெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள். எடுத்துக்காட்டு நெற்றிக்கண், சந்திரமுகி, சிவாஜி இப்ப எந்திரன் . ரஜினிக்கு ஹீரோவா நடிக்கிறதா விட வில்லனா நடிக்கிறதுதான் நல்லா இருக்கு. ரஜினி யாராலும் அசைக்க முடியாத ஹீரோ ஆனதுனால தமிழ் சினிமா ஒரு மிகச் சிறந்த வில்லன இழந்துருச்சு. ரஜினி anti hero வா நடிக்கிற இந்த மாதிரி படங்கள்தான் ரஜினியோட நடிப்புத் திறமையை காட்டுது.

என்னதான் இரண்டாம் பாதி சிட்டி நல்லா பண்ணி இருந்தாலும் இரண்டாம் பாதி சற்று இழுவையாகவே உள்ளது. முதல் பாதில technology அந்த அளவுக்கு use பண்ணதாகவே தெரியல. அந்த அளவுக்கு நல்லா இருக்கு. ஆனால் இரண்டாம் பாதியில் climax இன் நீளம் அயர்ச்சியையேத் தருகிறது. எப்படா சிட்டி ரோபோட்ட அழிப்பாங்க இல்ல பிடிபாங்கனு தோணுது. அணிமேட்ட்ராநிக்ஸ் technology ய வச்சு இன்னும் என்ன என்னவோ பண்ணி இருக்கலாம் . அத விட்டுட்டு 1000 சிட்டி ரோபோக்கள் வித விதமாச் சேர்ந்து வித வித வடிவங்களை எடுத்து ராணுவத்தை அடிக்கிறது ஒரு மாதிரி bore அடிக்குது. climax பிரமாண்டமா இருந்தாலும் மனதிற்கு அந்த அளவு பிடிக்கல.

படத்திற்கு மெனக்கெட்டிருப்பது நன்றாக தெரிகிறது. படத்தின் ஓட்டத்தை ஒப்பிடும் போது பாடல்கள் படத்திற்கு அயர்ச்சியைத் தருகின்றன. மத்த எல்லா படத்தையும் விட ஐஸ்வர்யா ராய் இந்த படத்துல ரொம்ப அழகா இருக்காங்க. படத்துல ஐஸ்வர்யா ராயனாலதான் கதையே நகர்கிறது. அந்த அளவிற்கு முக்கிய கதாப்பாத்திரம் .

நிச்சயமா படம் பார்க்கலாம்.

2 comments:

Kannan said...

மிகவும் அருமையான விமர்சனம்

Haripandi Rengasamy said...

Thanks Kannan