Sunday, April 3, 2011

We are the Champions



இதை விட மிகச் சிறந்த தருணம் என்ன இருக்கும். என்ன ஒரு அருமையான தருணம் ... இந்த தருணத்திற்காகத்தான் மொத்த இந்தியாவுமே காத்திருந்தது ... இதை வர்ணிக்க வார்த்தைகள் இருக்கா ... என் இந்தியாவை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த இதை விட வேறு என்ன வேண்டும் ...

இந்த உலககோப்பை ஆரம்பித்த பொழுது இந்தியா தான் World Cup favorites னு சொன்னாலும் , இந்த அணியின் சுமாரான சொல்லப் போனால் பலவீனமான பந்துவீச்சை வைத்து எப்படி ஜெயிக்கப் போகிறார்கள் என்று பலருக்கும் சந்தேகம் இருந்தது. அதற்க்கு ஏற்றார் போல் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் 338 ரன் எடுத்தும் இந்தியாவால் அதை defend பண்ண முடியல . மேலும் அடுத்து வந்த ஆட்டங்களில் 50 ஓவரையும் முழுமையாக விளையாட முடியாமல் அனைவரும் ஆட்டம் இழந்தனர் . மேலும் batting powerplay ல மிகச் சிறப்பாக score பண்ண முடியல. தென் ஆப்ரிகாவிற்கு எதிரான போட்டியில் 29 ரன்னுக்கு 9 wicket ஐ இழந்தது . ஆனால் அதற்கடுத்து வந்த காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளில் மிகச் சிறந்த மாற்றங்கள் தெரிந்தது. 50 ஓவர்கள் முழுமையாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. இந்த அணியில் அனைவரும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்தனர் தேர்வாளர் ஸ்ரீகாந்த் உட்பட. League ஆட்டங்களில் இந்திய அணி முழுமையாக 50 ஓவர்கள் விளையாட முடியாதபோது , ஸ்ரீகாந்த் தலையிட்டு யூசுப் பதானுக்கு பதிலாக சுரேஷ் ரெய்னாவை ஆடும் 11 இல் கொண்டுவந்தது தேர்வாளரின் கடமை அணியின் 15 வீரர்களை தேர்வு செய்வதோடு முடிந்து விடுவதில்லை , ஒவ்வொருவருக்கும் இந்திய அணி வெற்றி பெறவேண்டும் எண்ணம் உள்ளதை காட்டியது . தோனியும் ego எதுவும் பார்க்காமல் ரைனாவையும் , அஷ்வினையும் கொண்டுவந்தது அவரின் பிறர் குரலுக்கு மதிப்பு கொடுக்கும் பெருந்தன்மையை காட்டியது . நிச்சயமாக காலிறுதி மற்றும் அரையிறுதியில் இந்தியா மிகப் பெரிய மாற்றங்களை கண்டது . அதை கண்டுதான் இந்தியாவுடன் தோல்வி அடைந்த பாண்டிங்கும் , அப்ரிடியும் இந்தியாதான் கோப்பையை ஜெய்க்கும் என்றார்கள் . மேலும் தோனி சொன்னது போல இந்திய அணி இந்த உலக கோப்பையில் நன்கு பரிசோதிக்கப்பட்டது . chasing ஆனாலும் சரி defending ஆனாலும் சரி நன்கு பரிசோதிக்கப்பட்டது . மேலும் இந்தியாவிற்கான பாதையும் புற்கள் நிறைந்திருக்கவில்லை . உலகின் மிகச்சிறந்த அணிகளை வென்று இறுதி போட்டிக்கு வந்தது . அது ஆஸ்திரேலியாவாக இருக்கட்டும் , இந்த உலக கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தானாக இருக்கட்டும் மிக கடினமான அணிகளையே வென்று வந்தது .


ஆனால் இலங்கைக்கு அப்படி இல்லை . அவர்களின் பாதை மிக சுலபமாக இருந்தது . League ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடனான அவர்கள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது . பாகிஸ்தானுடன் அவர்கள் தோற்று விட்டார்கள் . காலிருதியிலும், அரையிறுதியிலும் அவர்கள் இந்த உலக கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்படாத இங்கிலாந்தையும் ,
நியூஜிலாந்தையும் வென்று வந்தார்கள் . அதுவும் அரையிறுதியில் நியூஜிலாந்துடன் அவர்கள் தடுமாறவே செய்தனர் . அவர்களுக்கு உண்மையான போட்டி இறுதியில் இந்தியாவுடன்தான் இருந்தது . மேலும் அவர்களது lower middle order சோதிக்கப்படவே இல்லை . இது அவர்களின் முன்னாள் வீரர்களை அதிகம் கவலை கொள்ளச் செய்தது .

மேலும் இந்தியாவின் மிகப் பெரிய பலம் தோனி. தோனியின் எந்த முடிவும் மிகத் துணிச்சலானது. போட்டியின் முடிவில் தோனி சொன்னது மிகச் சிறப்பானது. நான் இந்த போட்டியில் இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்தேன் ஒன்று அஷ்வினுக்கு பதிலாக ஸ்ரீசாந்தை எடுத்தது , அடுத்து மிகச் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கும் யுவராஜிற்கு பதிலாக இந்த தொடரில் நன்றாக விளையாடாத நான் 4 வது batsman ஆக இறங்கியது . நாங்கள் இந்த போட்டியை ஜெய்திருக்காவிட்டால் நிச்சயம் அனைவரும் அதை கேள்வி கேட்டிருப்பார்கள்.

மேலும் இந்த அணி 90 கள் மற்றும் 2000 களின் ஆரம்பத்தில் இருந்தது போல் இல்லை . கடைசி வரை போராட வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் இருக்கிறது . இலங்கையின் batting முடிந்தவுடன் பல வரலாறுகள் இந்தியாவிற்கு எதிராக இருந்தன . இதுவரை போட்டியை நடத்தும் அணி கோப்பையை ஜெய்ததில்லை, அதற்க்கு முன் நடந்த 9 உலக கோப்பைகளில் இரண்டாவதாக batting செய்த அணிகளில் 2 அணிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன . உலக கோப்பையின் இறுதி போட்டியில் சதம் அடித்தவர் இருந்த அணி தோல்வி அடைந்ததில்லை , மேலும் இலங்கை அணி முன்பு எதிர்பார்த்ததை விட மிக அதிக ரன்களை இறுதியில் எடுத்தது . மேலும் இலங்கையின் பந்துவீச்சும் மிகச் சிறப்பானது . இப்படி பல . மேலும் இந்த அணி முந்தி இருந்த அணி போல் பதற்றம் கொள்வதில்லை . இந்த தொடரில் மிகச் சிறப்பான தொடக்க ஜோடியான சச்சின் , சேவாக் ரன் எதுவும் எடுக்கும் முன்பே பிரிந்த போதாகட்டும், இந்த இறுதி போட்டியில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 18 ஆட்டம் இழந்து அணி 31/2 க்கு தத்தளித்த போதாகட்டும் இந்த அணி பதற்றம் கொள்ளவில்லை . சச்சின் போன பின் அணியே போய்விட்டது என்று எண்ணும் அணி அல்ல இது . காம்பிர் , கோலி போன்ற இளம் வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தையும் , மிகச் சிறந்த பொறுப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தினர் . தோனி , கேப்டனாக இருந்து Lead in Front ஆக இருந்தது மிகச் சிறப்பான பொறுப்புணர்ச்சி. இறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி இதற்க்கு முந்திய அனைத்து உலா சாம்பியன்களையும் இந்த உலக கோப்பையில் வெற்றி கண்டுள்ளது .



எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் . சச்சின் இந்த தொடரில் மிகச் சிறப்பாக விளையாடினாலும் , தொடரின் இரண்டாவது அதிக ரன் எடுத்தவராக இருந்தாலும் சச்சின் இறுதி போட்டியில் சோபிக்கவில்லை என்பது எனக்கு வருத்தம்தான் . நான் சச்சின் century of century இந்த இறுதி போட்டியில் அடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை , at least சச்சின் 50 ரன்களாவது எடுத்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும் . ஆனால் சச்சினின் பங்களிப்பை யாரும் குறை கூற முடியாது .


சச்சினை சுமக்கும் போது விராட் கோலி கூறியதுதான் சிறப்பு

"He carried the Indian Cricket for 21 years, so we wanted to carry him on our shoulders" - Virat Kholi



‎"I couldn't have asked for anything more than this. Winning the World

Cup is the proudest moment of my life. Thanks to my team-mates. Without

them, nothing would have happened. I couldn't control my tears of joy." - Sachin Tendulkar

This is Sachin :)


இந்தியாவிற்கு கடந்த 28 வருடங்களாகவும் , சச்சினுக்கு கடந்த 5 உலக கோப்பைகளாக கண்ணாம் பூச்சி காட்டிய உலக கோப்பை இறுதியில் இந்திய வசமானது மிகச் சிறப்பான தருணம் . ப்ரையன் லாராவிற்கு கிடைக்காதது , டான் பிராட்மேனுக்கு கிடைக்காத சிறப்பு சச்சினுக்கு கிடைத்துள்ளது . ஆம் சச்சின் இடம்பெற்ற அணி உலக கோப்பையை கைபற்றிவிட்டது . சச்சினின் மகுடத்தில் கிட்டத்தட்ட அனைத்து இறகுகளும் சேர்ந்து விட்டன .

We are the Champions. Yes We are the World .

1 comment:

JDK said...

எல்லா புகழும் "பூனம் பாண்டே"
விற்கெ :-P