Monday, April 15, 2013

இரும்புப் பெண்மணி : மார்கரெட் தாட்சர்

Photograph 

இதுவரை இருந்த ஆங்கிலேய பிரதம மந்திரிகளில் (கிட்டத்தட்ட 1721 களிலிருந்து ) நம்மில் பெரிதும் அறியப்பட்டவர்கள் இரண்டே பேர் . ஒருவர் இரண்டாம் உலகப் போர் புகழ் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றொருவர் மார்கரெட் தாட்சர் . இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த அட்லி பிரபு கூட நம்மில் பலருக்குத் தெரியாது. வின்ஸ்டன் சர்ச்சில் கூட இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பிரதமராக இருந்ததால் அதிகம் அறியப்பட்டார் என்பதில் அதிகம் ஆச்சரியம் இல்லை. ஆனால் மார்கரெட் தாட்சர் நம்மில் அதிகம் அறியப்பட்ட பிரதமர் என்பது ஆச்சரியம்தான்.

வின்ஸ்டன் சர்ச்சில் என்றால் எப்படி நமக்கு அவருடைய சுருட்டு ஞாபகம் வருதோ அதேபோல் மார்கரெட் தாட்சர் என்றதும் 'இரும்புப் பெண்மணி' என்று அவர் அழைக்கப்பட்டதுதான் ஞாபகம் வரும். அந்த அளவிற்கு அவர் பல துணிச்சலான முடிவுகள் எடுத்தார்.

மார்கரெட் தாட்சரையும் இந்திரா காந்தியையும் பல விதங்களில் ஒப்பிடத் தோன்றுகிறது . இந்திரா காந்தி எப்படி இந்தியாவின் முதல் பெண் பிரதம மந்திரி ஆகவும் இதுவரை இந்தியா கண்ட ஒரே பெண் பிரதம மந்திரியாக இருந்தாரோ அதே போல் லேடி தாட்சரும் இங்கிலாந்தின் முதல் மற்றும் இங்கிலாந்தின் கிட்டத்தட்ட முன்னூறு வருட கால பிரத மந்திரிகளின் சரித்திரத்தில் ஒரே பெண் பிரதம மந்திரி . இரண்டு பேருமே இரும்புப் பெண்மணிகள் என்று அறியப்பட்டவர்கள் . இரண்டு பேருமே கிட்டத்தட்ட சமகாலத்தில் ஆண்டவர்கள் . இரண்டு பேருமே போர்க்காலங்களில் பிரதம மந்திரிகளாக இருந்தனர். இந்திராகாந்தி எப்படி பாகிஸ்தானுடன் போரில் ஈடுபட்டாரோ அதேபோல் லேடி தாட்சர் அர்ஜென்டினாவுடன் போரில் ஈடுபட்டார். இரண்டு பேருமே அவர்கள் நாட்டை அதிக காலம் ஆண்டவர்களில் ஒருவர். இரண்டு பேருமே எதற்குமே compromise செய்து கொள்ளாதவர்கள். தாங்கள் எடுத்த முடிவுகளில் உறுதியாக இருந்தவர்கள் . அதனாலையே அவர்கள் இரண்டு பேரும் controversy களிலும் அதிகம் சிக்கினர் என்பதும் வேதனையான உண்மை. இரண்டு பேரைப் பற்றி பேச்சு வரும்போது அவர்களை கடுமையாக எதிர்ப்பவர்கள் அல்லது முழுமையாக ஆதரிப்பவர்கள் என்று இரண்டு சாராரே உண்டு. நடுப்பட்டவர்கள் என்று யாருமே இல்லை. 
 
இந்திராகாந்தி இந்தியர்களாலையே கொல்லப்பட்டபோது லேடி தாட்சரின் மரணத்தை பார்ட்டி வைத்து கொண்டாடுவோரும்  பிரிட்டனில் உண்டு ( 'Ding-Dong . The witch is dead ' என்று சிலர் மார்கரெட் தாட்சரின் மரணத்தைக் கொண்டாடுகின்றனர். லேடி தாட்சரின் இறந்த தினத்தன்று பிறந்த தினம் கொண்ட, ஒரு யூனியனில் தலைவராக இருந்த ஒருவர் இன்றுதான் எனக்கு மிகச் சிறந்த பிறந்தநாள் பரிசு கிடைத்துள்ளது என்றார். லண்டனில் இருந்த ஒரு borough லேடி தாட்சரின் இறப்பிற்கு துக்கம் அனுஷ்டிக்க மறுத்து பிரிட்டிஷ் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட மறுத்துவிட்டது. மரியாதைக்கு பெரிதும் அறியப்பட்ட பிரிட்டிஷாரே,  இப்படி அவரின் மரணத்தை கொண்டாடியது ஆச்சரியத்திற்குரியது மற்றும் வேதனையானது ).

எனக்கு என்னவோ இந்திராகாந்தியைப் போல் மார்கரெட் தாட்சரும் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்டதாலையே அவர் இந்தியர்களால் அதிகம் அறியப்பட்டார் என்று தோன்றுகிறது. ஆனால் மார்கரெட் தாட்சருக்கு அந்த பட்டத்தை கொடுத்தது பிரிட்டன் அல்ல. அவரால் அதிகம் வெறுக்கப்பட்ட அவரை அதிகம் வெறுத்த ரஷ்யா ஆகும். அதுவும் அது அவர் பிரதமராக ஆவதற்கு முன் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோதே அவ்வாறு அழைத்தது.

 எனக்கு என்னவோ மார்கரெட் தாட்சர் விமர்சனங்களாலையே  அதிகம் அறியப்படுவதாகவே தோன்றுகிறது. லேடி தாட்சரைப் பற்றி கூறும் 'Mrs Thatcher, Milk Snatcher ' சொலவடை சுவாரசியமானது . 1970 களில் அவர் கல்வித்துறை மந்திரியாக இருந்தபோது நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி பள்ளிகளில் வழங்கப்பட்ட இலவச பாலை நிறுத்தியதால் அவர் அவ்வாறு அறியப்பட்டார்.

பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கினார் .  அவருடைய காலங்களில் தனியார் மயமாக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களில் முக்கியமானவை British Rails, British Telecom, British Airways. அவருடைய காலங்களில் தொழிற்சாலைகளில் இருந்த யூனியன்களின் பலத்தை வெகுவாக ஒடுக்கினார். அதனால் பல வேலை நிறுத்தங்கள் அவர் காலத்தில் நடந்தன.

அவருடைய காலத்தில் அர்ஜென்டினா , British Overseas Territory ஆக இருந்த ஃபாக்லாந்து தீவை ஆக்கிரமித்தபோது பிரிட்டிஷ் படைகளை அனுப்பி அதனை மீட்டார் . ஆனால் இப்படி போரை ஏற்படுத்தாமல் பேச்சுவார்த்தைகளின் மூலமாகவே அப்பிரச்சினையை தீர்த்திருக்கலாம் என்று அதற்கு குற்றம் சாற்றப்பட்டார்.
அவரின் மீது கூறப்படும் மற்றொரு குற்றச்சாட்டு பிரிட்டனின் Manufacturing Industry ஐ வளரவிடாமல் தடுத்துவிட்டார் என்பது.
அவர் பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உலக அளவில் அறியப்பட்டாலும் அவர் பெண்ணியவாதிகளால் அதிகம் வெறுக்கப்பட்டார். அதற்கு அவர் பெண்ணியத்தை வெறுத்ததும் ஒரு காரணம்! . ஒரு பெண்ணாக இருந்தபோதிலும் அவர் பெண்களுக்காக பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்று குற்றம் சாற்றப்பட்டார். 

இப்படி அவர் மீது விமர்சனங்கள் வைத்தாலும் அவருடைய ஆதரவாளர்கள் , அமெரிக்காவைப் போல் பிரிட்டனும் பொருளாதார பெருமந்தத்திற்கு தலைப்பட்ட அக்காலத்தில் அவர் எடுத்த நடவடிக்கைகளே பிரிட்டனைக் காப்பாற்றின என்கின்றனர். அவர்கள் கூறுவது உண்மை என்று நிரூபிப்பது போல் அவரும் தொடர்ந்து மூன்று முறை மக்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . மேலும் பிரிட்டனை அதிக காலம் ஆண்ட பிரதமர்களில் அவரும் ஒருவர். அவரின் நடவடிக்கைகளாலேயே பிரிட்டனும் உலக அரங்கில் நிதித் தலைமையகம் என்ற தன்னுடைய இடத்தை தக்க வைத்துக்கொண்டது .
அவர் பிரிட்டனில் மட்டுமல்லாது உலக அளவில் மாற்றங்களுக்கு காரணமாக இருந்தார். அவருடைய காலத்தில் அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் மற்றும் சோவியத் யூனியனின் அதிபராக இருந்த கோர்பச்சேவுடனான அவரின் நெருக்கம் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனிற்கிடையேயான பனிப் போரை முடிவுக்கு கொண்டு வர உதவியது.

உலக  அரசியல் அரங்கில் பிரபலமடைந்த அனைத்து தலைவர்களைப் போலும் மார்கரெட் தாட்சரைச் சுற்றிலும் சர்ச்சைகள் சுற்றின. ஆன போதிலும் உலக அரங்கில் பெரிதும் அறியப்பட்ட பெண்களில் மார்கரெட் தாட்சர் முக்கியமானவர் என்றால் அது உண்மை .

Saturday, April 6, 2013

London Titbits


  1. நான் பார்த்தவரையில் இங்கு எழுத கணிசமானோர் பென்சிலை பயன்படுத்துகின்றனர்.
  2. இலண்டனில் இருக்கும் 33 Borough க்களில் 30 borough க்களில் குறைந்தது 100 மொழிகள் பேசப்படுகின்றன. இலண்டனில் பேசப்படும் மொத்த மொழிகள் 107. அதனால்தான் London , Global City என்றழைக்கப்படுகிறது. உலகில் மொத்தம் இரண்டே இரண்டு city கள்தான் Global City என்றழைக்கப்படுகிறது . ஒன்று லண்டன் மற்றொன்று நியூயார்க் சிட்டி (Alpha++ category) .
  3. இலண்டனில் ஆங்கிலத்திற்கு அடுத்து அதிகமாக பேசப்படும் மொழி போலிஷ்(Polish) அதற்கு அடுத்த இடங்களைப் பெறுபவை பெங்காலி, குஜராத்தி !.
  4. இலண்டனில் இருக்கும் 81 லட்சம் மக்களில் 3.2 லட்சம் மக்களுக்கு ஆங்கிலம் சுத்தமாக பேசத் தெரியாது அல்லது குறைந்த அளவே பேசத் தெரியும் .
  5. சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி முதன்முதலாக லண்டனில் ஆங்கிலேயர்களைவிட(White British) மற்ற இனத்தவர்கள் அதிகம். லண்டனில் ஆங்கிலேயர்கள் 45% தான்.
  6. இடது பக்கமாக வாகனம் ஓட்டுவதைப்  போல escalator இல் நீங்கள் படி ஏறிச் செல்வதாக இருந்தால் இடது பக்கமாகவும் , நிற்பதாக இருந்தால் வலது பக்கமும் நிற்க வேண்டும்.
  7.  ஒரு காலத்தில் உலகின் மிகப் பெரிய துறைமுகமாக இருந்த லண்டனில் கடல் இல்லை. லண்டன் துறைமுகம் அமைந்திருப்பது தேம்ஸ் நதியின் கரைகளில்தான். அதுவும் அது ஒரே துறைமுகமாக ஒரே இடத்தில் அமையவில்லை. தேம்ஸ் நதியின் கரையிலிருந்து வடகடல் வரை பரவி இருக்கிறது.
  8. இலண்டனின் மொத்த குடிநீர்த் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு தேம்ஸ் நதியின் மூலமே நிறைவேற்றப்படுகிறது . இங்கு பெரும்பாலான வீடுகளில் குடிக்க,குளிக்க மற்றும் எல்லாத் தேவைகளுக்கும் தேம்ஸ் நதியின் தண்ணீர்தான் உபயோகிக்கப்படுகிறது. நம்ம ஊர் பாசையில் சொல்லப்போனால் corporation water. இங்கு வீடுகளில் நான் எங்கும் தண்ணீர் சேமிக்கும் தொட்டிகளைப் பார்த்ததில்லை. ஏனென்றால் 24 மணி நேரமும் குழாயைத் திறந்தால் corporation தண்ணீர் வரும்.
  9. உலகின் costly ஆன நகரங்களில் லண்டனும் ஒன்று. சமீபத்தில் Bank of Canada வின் Governor ஆக இருந்த மார்க் கார்னி Bank of England Governor ஆக நியமிக்கப்படவுள்ளார். அதற்காக அவருக்கு அளிக்கப்படவுள்ள அதிக அளவு சம்பளமான வருடத்திற்கு 8.7 GBP (நம்ம ஊர் மதிப்பில் Rs 71 கோடி ) க்கான காரணங்களை கேட்டதற்கு அவர் கூறிய காரணங்களில் ஒன்று, தான் உலகில் இருக்கும் குறைந்த அளவு செலவாகும் தலைநகரங்களில் ஒன்றான ஒட்டாவாவிலிருந்து உலகில் அதிக அளவு செலவாகும் தலைநகரங்களில் ஒன்றான லண்டனுக்கு வருவது  என்றார் :).
  10. நீங்கள் குடி இருக்கும் வீட்டைப் (அது சொந்த வீடாக இருந்தாலும் வாடகை வீடாக இருந்தாலும்) பொறுத்து உங்கள் வீட்டிற்கு Council Tax விதிக்கப்படும். அது வீடு மற்றும் அந்த வீடு அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து மாறுபடும். இலண்டனில் இந்த வருடத்திற்கு Council Tax 623 - 1871 GBP வரை இருக்கிறது. நம்ம ஊர் மதிப்பின்படி Rs 51,000 - 1,54,000.
  11. டிவிக்கு இங்கு நீங்கள் license வாங்க வேண்டும். கலர் டிவிக்கு அதற்கு வருடத்திற்கு 145 GBP அதாவது நம்ம ஊர் மதிப்பில் கிட்டத்தட்ட Rs 12000. அதனாலையே நம்மைப் போல் இங்கு வந்து ஒரு வருடத்திற்கு வேலை பார்த்துச் செல்பவர்கள் வீட்டில் பெரும்பாலும் டிவி வைத்திருப்பதில்லை . இந்த பணம் BBC க்கு கொடுக்கப்படும். இந்தியாவில் இந்த மாதிரி டிவி மற்றும் ரேடியோக்கு இருந்த license 1984 லேயே விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டது.
  12. தேம்ஸ் ஆற்றின் தண்ணீர் உபயோகிப்பதற்கு வருடத்திற்கு 354 GBP செலுத்த வேண்டும் . அதாவது நம்ம ஊர் மதிப்பில் Rs 29,000.Council Tax , கரண்ட் bill , water bill , gas bill , TV license இப்படி எல்லாம் சேர்த்தால் எப்படியும் 200 GBP மாதம் வந்துவிடும் . வருடத்திற்கு 2400 GBP . கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் !
  13. இலண்டன் சிட்டி மையம் Zone 1 என்று அழைக்கப்படும். அதைச் சுற்றி அடுத்து Zone 2 .  அதற்கடுத்து அடுத்த Zone . இப்படியாக லண்டனை சிட்டியை 9 சுற்றுக்களாகப்  பிரித்திருப்பார்கள் .வெளி வட்டத்திலிருந்து மையம் நோக்கிச் செல்லச் செல்ல பயணக் கட்டண விகிதாச்சாரம் கூடும். Zone 2-4 க்கான கட்டணம் 96 GBP ஆக இருக்கும்போது Zone 1-3 க்கான கட்டணம் 136 GBP .
  14. இங்கு சைனீசுக்கு அடுத்து இந்திய உணவுகள் அதிகம் விரும்பப்படுகின்றன. 26% த்துடன் சைனீஸ் உணவுகள் முதல் இடத்திலும் 24% த்துடன் இந்திய உணவுகள் இரண்டாமிடத்திலும் உள்ளன. சரவண  பவனில் மசாலா தோசாவை விரும்பி உண்ணும் வெள்ளையர்களை அதிகம் பார்த்திருக்கிறேன்.
  15. இங்கு பத்திரிகைகளில் TAXPAYERS MONEY என்பது அதிகம் உபயோகிக்கப்படும் சொற்றொடர் . அதாவது அரசாங்கத்தின் பணம் எங்காவது வீணானால் , TAXPAYERS MONEY வீணாகிறது என்றுதான் எழுதுவார்கள்/கூறுவார்கள் . அதனால் மக்களின் பணம் வீணாகக் கூடாது என்பதில் மக்களுக்கும் அதிக பொறுப்புணர்ச்சி இருக்கிறது (எனக்கு இங்கு 1,75,000 கோடிதான் நினைவுக்கு வருகிறது :( ).
  16. இங்கு புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.  ரயில்களில் kindle அல்லது நாவல்கள் வைத்து படிப்பவர்களை அதிகம் பார்க்க முடியும் .  பெரும்பாலும் அவை முறையாக பணம் கொடுத்து வாங்கப்பட்டவையாகவோ அல்லது தரவிரக்கப்பட்டவையாகவோ இருக்கும். அதைப் பார்க்கும்போதுதான் நம்ம ஊர் இலக்கியவாதிகள் ஏன் இந்தியா மேற்குலக நாடுகளைப் போல் மாறவேண்டும் என்று கூறுவதின் அர்த்தம் புரிந்தது ;) .